Wednesday, January 14, 2009

மண் மொழி

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியில் உட்கட்சி சனநாயகம், கருத்துச் சுதந்திரம் இல்லை, மாற்றுக்¸ருத்துக்கள் ஒடுக்கப்படுகிýறன என்று சொல்லி அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் இராஜேந்திரசோழனை அமைப்பாளராகக் கொண்டு 'தமிழ்த்தேச மார்க்சியக் கட்சி' என்கிற புதிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளனர். மார்க்சிய வழியில் தமிழ்த்தேச தன்னுரிமைக்குப் போராடுவதையே நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பு 'மண், மொழி' என்கிற மாத இதழைத் தொடங்கியிருக்கிறது. முதல் இதழ் ஜனவரி - பிப் 06இல் வெளிவந்துள்ளது. ஆசிரியர், இராஜேந்திர சோழன். ஆசிரியர் குழு : காஞ்சி அமுதன், சக்தி சுப்பு, பொன் மாயவன் ஆகியோர்.

"இன்று தமிழ், தமிழக நலன் சார்ந்து குரல் கொடுக்க º¢ற்சில அமைப்புகள், கட்சிகள் இருக்கின்றன. இக்குரல்கள் அவ்வப்போது நிலவும் சூழலுக் கேற்ப எழுந்தும் தணிந்தும், வீறுபெற்றும், நீர்த்தும் ஏற்ற இரக்கங்களோடே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வமைப்புகள் அனைத்திலும் உள்ள உணர்வாளர்களை ஒன்றிணைக்கவும் உடனடியாக வென்றெடுக்கும் சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைத்து விடாப்பிடியாகவும் தொடர்சியாகவும் அதற்காக - போராடவுமான நிலைத்த ஒர் இயக்கத்தை உருவாக்க முடியாதா என்னும் அவாவில் அதற்கான ஒரு ஒருங்கிணைப்பாளனாகச் செயல்படமுடியாதா எனும் முயற்சியில் தோற்றம் பெறுவதே இந்த இதழ்" என இதழ் தோற்றத்துக்கான காரணத்தை விளக்குகிறது முதல் இதழ் தலையங்கம்.

இதில் காத்திரமான கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றன. இராசேந்திர சோழனின், 'மண் உரிமைகாக்க மலைவாழ் பழங்குடி மக்கள் போர்', கணியனின், 'கட்சத்தீவு பிரச்சினை கோர வேண்டியது குத்தகையல்ல, பெற வேண்டியது மொத்தத் தீவையும்', சாங்கியனின், 'பீகார் : மாறும் அதிகாரம் மாறாத வன்முறை', பரிமுதல்வனின், 'தனியார் கல்வி நிறுவன இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம்', காஞ்சி அமுதனின், 'பாலாற்றைப் பாதுகாப்போம்' போன்ற முக்கியமான கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.

"இன்று தமிழகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளாக மண் பிரச்சனை, ஆற்று நீர் பிரச்சினை, இயற்கைக்கனி வளங்கள் பற்றிய பிரச்சனை, மொழிப்பிரச்சனை, கலை, பண்பாட்டுப் பிரச்சனை என எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்காக பல்வேறு சக்திகள் குரல் கொடுத்தும் வருகின்றன. இச்சக்திகளை அடையாளம் காண்பதும் இவற்றை ஒன்றுக் கொன்று தொடர்பு படுத்துவதும் முடிந்த அளவில் இவற்றிற்கிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும் இவற்றை ஒர் அணியில் திரட்ட முயல்வதுமே இதழின் நோக்கம்" என்கிறார், ஆசிரியர் முதல் இதழ் தலையங்கத்தில்.

சந்தா :
ஆண்டுக்கட்டணம் - ரூ.70.00
தனி இதழ் - ரூ. 5.00
மூன்றாண்டுக்கட்டணம் - ரூ.200.00
வாழ்நாள் கட்டணம் - ரூ. 1000.00

முகவரி :
மண் மொழி (மாத இதழ்),
காந்தி நகர், மயிலம் - 604 304,
திண்டிவன வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி : 04147 - 241256
செல் : 9443212761
நன்றி : அந்திமழை

No comments: