Wednesday, January 14, 2009

சமரசம்

கலை இலக்கியத் தளத்தில் பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருப்பது போலவே மதம் - மார்க்கம் சார்ந்தும் பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் இதழ் சமரசம். இரு மாத இதழ். 1948 இல் தொடங்கப்பட்ட ஜமா அத்தே இஸ்லாமியஹிந்த் எனும் அகில இந்திய இஸ்லாமிய அமைப்பின் இதழ் சமரசம். இவ்விதழின் நிறுவன ஆசிரியர், எம்.ஏ.ஜமீல் அஹ்மத். ஆசிரியர், ஹெச்.அப்துர்ரகீம், பொறுப்பாசிரியர் சிராஜுல்ஹசன், துணை ஆசிரியர், டி. அஜுஸ்லுத்புல்லாஹ். இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழ். 1980 ஆம் ஆண்டு ஜுன் 16 முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இப்போது 26 வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

முக்கியமாக இஸ்லாமிய வாசகர்களையும், படைப்பாளிகளையும் முன்னிலைப்படுத்தி இதழ் நடத்தப்பட்டாலும் இஸ்லாமியர் அல்லாதவர்களும் இதன் வாசகர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இஸ்லாமிய இதழ்கள் எல்லாம் உருதுச் சொற்களையும் அரபிச் சொற்களையும் கலந்து இஸ்லாமியர்களுக்கு மட்டுமே புரியும் படியான மொழியில் வெளிவந்து கொண்டிருந்தபோது எல்லாருக்கும் புரியும் படியான எளிய தமிழில் சமரசம் வெளிவரத் தொடங்¸¢யது. அதன் பிறகு தான் மற்ற இஸ்லாமிய இதழ்கள் எல்லாம் எளிய தமிழில் வெளிவர ஆரம்பித்தன என்கிறார் இதன் பொறுப்பாசிரியர், சிராஜுல்ஹசன்

சிறுகதை, கவிதை, நேர்காணல், தொடர், கேள்விபதில், நாட்டுநடப்பு, முகப்புக் கட்டுரை, தேசம், சர்வதேசப்பிரச்º¢னைகள், பெண்ணுலம், ஆளுமை, சிறுவர் அரங்கம், மருத்துவம் ஆய்வு, தனித்துவமான தலையங்கம், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், புத்தக அறிமுகம், கடைசி பக்கம், போன்ற பகுதிகள் இவ்விதழில் வெளியாகி வருகின்றன.

அருந்ததிராய், பி. சாய்சாத், குல்தீப்நய்யார், கு‰வந்த்சிங், சாமிநாதன், எஸ். ஐயர், கல்பனாசர்மா, சசிதரூர், போன்றோரது கட்டுரைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. நவீன ஏகாத்திபத்தியத்தை நடுங்க வைக்கும் திட்டங்கள், கணவன் மனைவியின் உளவியல் தேவைகள், திரைப்பட பாடல்களும் பாலியல் சீண்டல்களும், தண்ணீர் தரும் செய்தி, இந்தியா ஒளிர்கிறது, எருமை தேசம் §À¡ன்றபல முக்கியமான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.

சாலை இளந்திரையன், பிரபஞ்சன், பேரா.அ.மாக்ஸ், பேரா.பொன்னுசாமி, க.திருநாவுக்கரசு, சௌந்தரா கைலாசம், ஸ்பிக் இரவீந்தரன், பிர்தௌஸ் இராஜகுமாரன், சிராஜுல்ஹசன், இக்மான் அமீர், தாழை மதியவன், அஜுஸ்லுத்ஃபுல்லாஹ் போன்றோரின் படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம் பெற்று வருகின்றன.

நவீன எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், சமூகவியலாளர்கள் போன்றோரின் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன. கவிஞர்கள் அப்துல் ரஹ்மான், அபி, எழுத்தாளர்கள் தோப்பில் முகமது மீரான், சாருநிவேதிதா, தேவிபாலா, லேனாதமிழ்வாணன், ஆர்னிகாநாசர் போன்றோரது நேர்காணல்கள் குறிப்பிடத்தக்கது.

அவ்வப்பொழுது சர்ச்சைகளையொட்டி விவாதங்களும் இவ்விதழில் மேற்கொள்ளப்படுகின்றன. மணிரத்தினத்தின் ரோஜா, பம்பாய் படங்கள் குறித்தும், மதரஸாக்களின் பாடத்திட்டம், கிரிக்கெட், குடும்பக் கட்டுப்பாடு, இந்துத்துவா ஆகியன குறித்தும் நடத்தப்பட்ட விவாதங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. மற்ற இஸ்லாமிய இதழ்களில் இஸ்லாம் குறித்து மட்டுமே கேள்வி - பதில் பகுதி அமையும். எங்கள் பத்திரிகையில் சமூக, அரசியல், இலக்கியம், சார்ந்தும் கேள்வி - பதில் பகுதி அமைந்திருக்கிறது. என்கிறார், துணை ஆசிரியர் அஜுஸ்லுத்ஃபுல்லாஹ். இவ்விதழில் வெளியாகி வரும் கடைசிப்பக்கம் பகுதியில் முக்கிய பல செய்திகள் இடம் பெறுகின்றன.

சமரசத்தில் வெளியாகும் கட்டுரைகளை இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்(ஐகுவு)நூல்களாகத் தொகுத்து வெளியிட்டு வருகிறது.

சில முக்கிய நிகழ்வுகளையொட்டி கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது சமரசம்.

இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவது, தேசம், மாநிலம் சார்ந்த பிரச்சினைகளை இஸ்லாம் சார்ந்து அணுகுவது சமரசத்தின் நோக்கமாகும் என்கிறார் பொறுப்பாசிரியர் சிராஜுல்ஹசன்.

ஆசிரியர் பற்றி :

ஐம்பது வயதைக்கடந்துவிட்ட அப்துர் ரகீம் இளம் அறிவியல் வேதியியல் பட்டதாரி. ஜமா அத்தே இஸ்லாமியஹிந்த் மாநில தலைவராகவும் அதன் மத்திய ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். தற்போது இஸ்லாமிய வங்கியில் ஆர்வம் செலுத்தி வரும் இவர் ஒரு தொழிலதிபரும் கூட.

இஸ்லாமிய மார்க்க செய்திகளுடனும் இயக்க செய்திகளுடனும் படைப்பிலக்கியத்திற்கும் இன்றும் முக்கியத்துவம் கொடுக்க சமரசம் செய்து கொண்டால் பொதுத்தளத்தில் சமரசம் கூடுதல் கவனம் பெறக்கூடும்.

ºó¾¡ Å¢ÀÃõ :

தனி இதழ் - ரூ10
ஆண்டுசந்தா - ரூ220
வெளிநாட்டுசந்தா - ரூ 820

முகவரி:

ஆசிரியர்,
138, பெரம்பூர் நெடுஞ்சாலை,
சென்னை 600012
தொலைபேசி : 044 26620091
fax :26620682

email:
iftchennai 12@gmail .com

website:www.iftchennai.ஒர்க்

நன்றி : அந்திமழை

No comments: