Wednesday, January 14, 2009

தச்சன்

"தோற்றின் சுவடுகள்....
இன்றின் பதிவுகள்....
நாளையின் விடியல்கள்....
வாழ்வுச் சுழற்சியின்
ஓயாத ஓட்டங்கள்
ஓட்டம் முடிவதற்குள்
கடந்துவிடு அதிக தூரம்
ஏனெனில்
கடந்த தூரத்தால் மட்டுமே கணிக்கப்படுகிறது
உனது வாழ்வின் எல்லை"

- சிங்க.சௌந்தர்ராஜன்
('தச்சன்' - மார்ச் - ஏப்ரல் 2006)

மக்களுக்கானவற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்கிற இலட்சிய நோக்கில் தொடங்கப்பட்ட சிற்றிதழ், 'தச்சன்' - இருமாத இதழ். முதல் இதழ் 2001, ஜீன் - ஜுலையில் வெளிவந்தது. இதுவரை (மார்ச் - ஏப்ரல் 2006) 15 இதழ்கள் வெளிவந்துள்ளன. முதல் இரண்டு இதழ்கள் நகலில் 8 பக்கத்தில் வந்தது. பிறகு 16 பக்கங்களில் கருப்பு வெள்ளையில் வெளிவந்துகொண்டிருந்த இவ்விதழ், தற்போது 20 பக்கங்களில் வருகிறது. முழு வெள்ளைத் தாளில் நான்கில் ஒரு பங்கு அளவில் மாறுபட்ட வடிவில் இவ்விதழ் வடிவமைக்கப்ட்டிருக்கிறது. இதன் ஆசிரியர், இரா.நாகராஜன்.

இவரது தந்தை ஆச்சாரி வேலை பார்த்து இவரைப் படிக்க வைத்ததால் தந்தையின் உழைப்பை போற்றும் விதமாக 'தச்சன்' என்று இதழுக்குப் பெயர் சூட்டியதாக இவர் சொல்வது நெகிழ்ச்சியான செய்தி. பல்வேறு மரங்களை இணைத்து நல்ல பொருள் செய்வதுபோன்று பல்வேறு படைப்புகளைத் தாங்கி நல்ல சிற்றிதழாகக் கொண்டுவர வேண்டும் என்கிற நோக்கத்தையும் உள்ளடக்கி 'தச்சன்' எனப் பெயரிட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார், ஆசிரியர். இரா.நாகராஜன்.

தலையங்கம், கவிதை, சிறுகதை, நேர்காணல், நூல் விமர்சனம், கட்டுரை ஆகியவை இவ்விதழில் வெளியாகிவருகின்றன.

குஜராத் கலவரம், ஈராக் பிரச்சினை குறித்த தலையங்கங்கள் குறிப்பிடத்தக்கவை. சிற்றிதழ் ஆசிரியர்கள் எழுதிய 'இதழாளன் அசைபோடுகிறேன்' தொடரும் முக்கியமானதாகும். இலக்கியக் கூட்டங்கள் பற்றிய செய்தித்தொகுப்பு 'அரங்கிலிருந்து' எனும் பகுதியில் வெளியாகிவருகிறது. ஆதிகம் அறியப்படாத, காத்திரமான படைப்பாளிகளின் நேர்காணல்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. அவ்வகையில், புதிய மாதவி, தமிழ்மொழி ஆகியோரது நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

பாப்லோ அறிவுக்குயில், கீரனூர் ஜாகீர்ராஜா, வே.சபாநாயகம் உள்ளிட்§¼¡ரது சிறுகதைகளும், விக்ரமாதித்யன், மு.முருகே‰, இலக்குமி குமரன் ஞாலிதிரவியம், பாலபாரதி, சிங்க.சௌந்தர்ராஜன் உள்ளிட்டோரது கவிதைகளும் வெளியாகியுள்ளன. 'திருவையாறு பாரதி இயக்கம்' வெள்ளிவிழா ஆண்டு சிறப்புமலர் ஒன்றையும் 'தச்சன்' வெளியிட்டிருக்கிறது. இவ்வியக்கம் பற்றிய செய்திகளும் பாரதிபடைப்புகளும் அறிவுமதி கவிதையும் இம்மலரில் வெளியாகியுள்ளன. 'தச்சன்' பதிப்பகம் சார்பில் 'காற்றுபுகா வனம்', 'இளமகளின் மௌனங்கள்' எனும் இரண்டு கவிதைத்தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

"இதயம் பேசுகிறது இதழில் வெளியான 'சிற்றிதழ் அறிமுகம்' பகுதிதான் எனக்குச் சிற்றிதழ் உலகை அறிமுகப்படுத்தியது. நம் பகுதி வாசகர்களின், படைப்பாளிகளின் படைப்புகள் வெளியிடுவதற்கு ஓர் இதழைத் தொடங்க வேண்டும் என்கிற எண்ணத்தால் 600 ரூபாய் சம்பளத்திற்கு விற்பனைப்பிரதிநிதியாகப் பணியாற்றிய போது 'தச்சன்' இதழைத் தொடங்கினேன்" என்கிறார், இரா.நாகராஜன்.

ஆசிரியர் பற்றி....

முப்பதே வயதான இளைஞர் இரா.நாகராஜன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கவிஞர், பத்திரிகையாளர், சமூகச்சிந்தனையாளர், பதிப்பாளர் எனப் பன்முகந்தன்மை கொண்டவர். 'சங்கமம்' இணைய இதழின் ஆசிரியர் குழவில் இணைந்து பணியாற்றியவர். சிற்றிதழ்களுடன் தொடர்புடைவர்.

சந்தா மற்றும் முகவரி :
ஆண்டு நன்கொடை - ரூ. 30.00
இரண்டாண்டுக்கு - ரூ. 50.00
மூன்றாண்டுக்கு - ரூ. 75.00
வாழ்நாள் - ரூ. 300.00

முகவரி :
இரா.நாகராஜன்,
தெ‰ண பாஸ்கரன், (ஸ்ரீ நாச்சி ஸ்டோர்ஸ்),
70/24, செல்வம் பாரடைஸ், அகஸ்தியர் தெரு,
சிவானந்த குருகுலம் எதிரில்,
தாம்பரம் கிழக்கு, சென்னை - 600 059.
பேச : 98405 16052.
மின்னஞ்சல் : nagarajan_tyr@yahoo.co.இன்

நன்றி: அந்திமழை

No comments: