"இவ்விதழ் பல்சுவை இதழாக வெளிவருகிறது. கலை, இலக்கியம், சமூகம், மொழி, தேசம், தெய்வீகம், போன்றப் பல சுவைகள் இவ்விதழில் காணப்படும். ஏதேனும் இÉம் சார்ந்தப் பார்வைக்கோ, இயக்கம் சார்ந்த சிந்தனைகளுக்கோ, வலுக்கொடுக்கும் முயற்சி இவ்விதழில் காணக் ¸¢டைக்காது. இப்பிரபஞ்ச இயக்கத்தில், இது இப்படித்தான் என்று எதையும் தீர்மானமாக முடிவு செய்துவிட முடியாது. எது எப்படியும் மாறும். அதற்கான சூழலை காலம் கொண்டு வந்து சேர்க்கும்.
முடிந்தவரை இவ்விதழ் சக மனிதனின் துயர்களையபாடுபடும். அவனின் மகிழ்ச்சி, துக்கம், இயலாமை, கோபம் இவற்றையே எதிரொலிக்கும். சக மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களை அவிழ்க்க அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொள்ளும்" என்கிற அறிவிப்புடன் செப்டம்பர் 2005இல் வெளிவந்த இதழ் குழலோசை. இதன் ஆசிரியர் வெ.கோகுலமுத்தரசன். கவிதை, சிறுகதை, நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு, நேர்காணல், கட்டுரை என வெளியாகி வருகின்றன.
தற்போது இவ்விதழ் கணிப்பொறி ஒளியச்சு நகலில் வெளி வருகிறது. வண்ணைசிவா, தங்கம் சரவணன், சூரியராஜன், செந்தூரம் ஜெகதீ‰, பாக்யம் சங்கர், இர.முனுசாமி, கோ.மகேசன், வெ.கோகுலமுத்தரசன், ச.அறிவழகன் போன்றோர்கள் இவ்விதழில் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.
சிறிய அளவில் இவ்விதழ் வெளிவந்தாலும் தரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
முகவரி :
குழலோசை,
146, இரண்டாவது தெரு,
நேதாஜி நகர்,
தண்டையார்பேட்டை,
சென்னை - 81.
சந்தா விவரம் :
இதழ் நன்கொடை - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 50.00
நன்றி : அந்திமழை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment