Wednesday, January 14, 2009

பிரம்மராஜன், கோணங்கி, பிரமிள்... மற்றும் ஒரு வேண்டுகோள்.

பிரம்மராஜன், கோணங்கி, பிரமிள்... மற்றும் ஒரு வேண்டுகோள்.
ஆர்வமுள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு உதவலாம்... உதவாமலும் போகலாம்... என்றாலும்... சிறு பத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது என மூத்த எழுத்தாளரான அசோகமித்திரன் அறிவித்துள்ள நிலையில் சில சிற்றேடுகள் இப்போது வீரியத்துடன் தமிழில் வர ஆரம்பித்திருக்கின்றன. ஆங்கிலத்தில் அவான் கார்ட் (Avant - garde) என்றொரு சொல் உண்டு. இது இலக்கிய சொல் என்றாலும் ராணுவ உருவகம் கொண்டது. இதன் அர்த்தம் 'இலக்கிய முன்னணிப்படை'.புதிய மற்றும் சோதனை ரீதியான படைப்பாக்கங்களை ஒருபோதும் வணிக எழுத்தாளர்களாலோ, நடு இதழ் எழுத்தாளர்களாலோ படைக்க முடியாது. அந்த இதழ்களை நிரப்பும் பக்கங்கள் அந்தவகை எழுத்துக்களை என்றுமே கோர்க்காது. இலக்கிய முன்னணி படையை சார்ந்த எழுத்தாளர்களாலேயே அந்தவகை படைப்பை படைக்க முடியும். அதற்கு சிறு பத்திரிகைகள் மட்டுமே இடம் கொடுக்கும். இது உலக இலக்கிய சரித்திரத்தின் அனைத்து கலைகளிலும் பதிவாகியிருக்கும் விஷயம். கண்டிப்பாக ஜாய்ஸின் 'யூலிஸிஸ்' நாவலோ அல்லது ராபர்ட் மியூஸிலின் 'நிர்க்குண மனிதன்' போன்ற நாவலோ அல்லது 'டிக் ஷ்னரி ஆஃப் கசார்ஸ்' பிரதியோ நடுப்பத்திரிகைகளில் வர வாய்ப்பேயில்லை.இப்படியான பின்நவீனத்துவ சூழலில் மீண்டும் தமிழில் சில சிறு பத்திரிகைகள்...ஆத்மாநாமின் 'ழ' பத்திரிகை வழியே வெளிச்சத்துக்கு வந்த கவிஞர் பிரம்மராஜனின் 'மீட்சி' சிற்றிதழை அவ்வளவு சுலபத்தில் யாரும் மறந்துவிட முடியாது. பிரம்மராஜனின் கவிதைகள் புரியவில்லை... என விமர்சனம் எழுந்தபோது நாகார்ஜுனன், அவரது கவிதைகளில் உள்ள முன் - பின் வார்த்தை விளையாட்டை கட்டுடைத்து, கலைத்து எழுதிய கட்டுரை இன்றளவும் தமிழின் சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் மீட்சியின் உலக கவிதைகள் தொகுப்பு பல கவிஞர்களுக்குள் வேகத்தை கிளப்பிய தொகுப்பு.அதே பிரம்மராஜன் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் 'நான்காம் பாதை' சிற்றிதழை ஆரம்பித்திருக்கிறார். முதல் இதழ் இப்போது வெளியாகியிருக்கிறது. தனியிதழ் ரூ. 50. ஆண்டுச் சந்தா ரூ. 200. கூரியில் செலவு தனி.தொடர்புக்கு A30, ASTC நகர், பென்னாகரம் சாலை, தருமபுரி - 636 703. தொலைபேசி எண்: 04342 - 281239. கைபேசி: 98941 41752 e - mail: bramoraj@yahoo.comஅடுத்து 'லயம்'. பிரமிளை முன்வைத்து இயங்கிய அதே 'லயம்' சிற்றிதழ்தான். பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. ஆசிரியர் மாறவில்லை. அதே கால சுப்ரமணியம்தான். பிரமிளின் பிரசுரமாகாத படைப்புகளையும் அவரை குறித்த விமர்சனங்களையும் 'லயம்' வெளியிட்டு வரும் என ஆசிரியர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரமிளின் பிரசுரமாகாத கவிதையொன்று இந்த இதழில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதை...பிலம்ஒப்புமைப் பின்னலின்நரம்பு முடிச்சுகளாய்நக்ஷத்ரங்கள் -அண்டத்தின் அநந்தங்கள்.அவற்றின்ஈர்ப்பு வெளிக் கோளங்கள்ஒன்றை ஒன்றுஊடுருவுகின்றன.ஜடத்தினுள் ஜடம் சிக்கிஎங்கோ ஒரு முடிச்சில்அதீத ஜடத் திணிப்பு.அதையே நோக்கிவளைகிறது புவனவெளி.பிரபஞ்ச நியதியில்பிறக்கிறது புரட்சி.ஒப்புமைப் பின்னல்கலைகிறது.ஒரு புள்ளி நோக்கிஅண்டத்தின்பரிமாணங்கள் சரிந்துஒரே ஒருநக்ஷத்திரத்தின் முடிச்சினுள்ளேவீழ்கிறது காலவெளி.ஒளிரும் ஒரு நக்ஷத்திரத்தின்ஜடம் ஒரு பொந்தாகிதன் ஒளியை அதுதானே கபளீகரிக்கிறது.வெளி வளைந்து குவிந்துவெளியில் பிறக்கிறதுஒரு பிலம்.(??? 1955)தனியிதழ் ரூ. 15. ஆண்டுச் சந்தா ரூ. 100.தொடர்புக்கு எஸ். விமலா, 155, கிழக்கு வீதி, நேரு நகர், சத்தியமங்கலம் - 638 402. தொலைபேசி எண்: 04295 - 220097. கைபேசி: 9442680619எந்த சிமிழுக்குள்ளும் அடங்காமல் இருக்கும் கோணங்கியின் 'கல்குதிரை', தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் தனியிடம் கொண்டது. அந்த இதழ் வெளியிட்ட மார்க்யூஸ் சிறப்பிதழும், உலக சிறுகதை தொகுப்பும் ஏற்படுத்திய அதிர்வு இன்றுவரை தொடர்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த இதழ் வரலாம்... வராமலும் போகலாம்... அப்படி வந்தால் எப்போது வரும் என்பது கோணங்கிக்கே தெரியாது...இந்த நிலையில் கோணங்கியின் ஒரு புத்தகம் வாசகனுக்காக காத்திருக்கிறது...வணிக இதழ்களிலோ, நடு இதழ்களிலோ எழுதாமல், விலைபோகாமல் சிறு பத்திரிகைகளில் மட்டுமே இயங்குவதை பிடிவாதமாக பின்பற்றி வரும் ஐகான், கோணங்கி. புரியாமல் எழுதுகிறார்... என்ற குற்றச்சாட்டு அவர் மீது காலம் காலமாக வீசப்பட்டு வருகிறது... இதற்கு கோணங்கி என்ன செய்வார்?அவரது சில சிறுகதைகளும், சில குறுநாவல்களும் இணைந்து 'இருள்ள மெளத்திகம்' என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. பின்னிணைப்பாக 'தன்னுடன் தன் நேர்காணல்' இணைக்கப்பட்டுள்ளது. தேவதச்சன், ந. நடராஜன், பூபதி, அறிவழகன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு கோணங்கி பதில் சொல்லியிருக்கிறார்.விலை: ரூ. 212. 'தென் திசை' பதிப்பகத்தின் ஒர் அங்கமான 'காதை' வெளியீடு.தொடர்புக்கு A19, Srinivasa reddy street, T. Nagar, Chennai - 600017. தொலைபேசி எண்: 044- 2433 8169. e - mail: kkbooks07@rediffmail.comஇறுதியாக... பதிவுலகை சேர்ந்த இருவருக்கு இந்தப் பதிவின் வழியே ஒரு கோரிக்கை. ஒருவர் ஜமாலன். 'காலக்குறி' சிற்றிதழை மீண்டும் அவர் ஆரம்பிக்க வேண்டும். அடுத்தவர் நாகார்ஜுனன். 'வித்தியாசம்' இதழை திரும்பவும் தமிழ் சூழலுக்கு அவர் கொண்டு வரவேண்டும். வருவார்கள். பின்நவீனத்துவசூழல் அவர்கள் இருவரையும் மீண்டும் சிற்றிதழை தொடங்க வைத்துவிடும்...

நன்றி: பைத்தியக்காரன்,
naayakan.blogspot.com/2008/03/blog-post_17.html

No comments: