Wednesday, January 14, 2009

உழைப்பவர் ஆயுதம்

"உழைக்கும் மக்களின் சமூக விடுதலைக்காக கலை இலக்கியப் பண்பாட்டுத் தளங்களில் பணியாற்றும்போது பல்வேறு சமூகக் கொடுமைகளுக்குப் பலியான இலக்கியப் படைப்பாளர்களுக்கு உங்களுடன் உழைப்பவர் ஆயுதம் சார்பில் வீரவணக்கம்.

உங்கள் கைகளில் இருக்கும் உழைப்பவர் ஆயுதம் இதழ் சலவைத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் சமூக விடுதலைக்கான வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கலை இலக்கிய பண்பாட்டுத் தளங்களில் பணியாற்ற உழைப்பவர் ஆயுதம் இதழ் மூலமாக உங்களுடன் கலந்திட வருகிறோம்." என நவம்பர் 2005 இல் புறப்பட்ட இலக்கிய பண்பாட்டு மாத இதழ் 'உழைப்பவர் ஆயுதம்'. ஆசிரியர் த.ம.பிரகா‰ ஆலோசனைக் குழு : சௌ.சுந்தரராசன், பெ.அன்பு, மு.சி.இராதா¸¢ரு‰ணன், அ.மு.முரகராசன். பல வண்ண அழகிய அட்டையுடன் 64 பக்கங்களில் A4 அளவில் வெளிவருகிறது.

கட்டுரைகள், கவிதை, சிறுகதை, நேர்காணல் பதிவுகள், நாடகம், நூல் அறிமுகம், கடிதங்கள் என வெளியாகி வருகின்றன. ஆ.சிவசுப்ரமணியனின் 'பண்பாட்டுப் போராளி நா.வானமாமலை' எனும் முக்கியமான தொடர் வெளியாகி வருகிறது. 'தொடங்கிவிட்டதா மூன்றாம் உலக நாடுகளின் மீதான யுத்தம்' - ந.முத்துமோகன், 'பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும்' - தொ.பரமசிவன், 'புதிய ஜனநாயக புரட்சியின் திசை நோக்கி இட ஒதுக்¸£ட்டு உரிமைப் போரை வளர்த்தெடுப்போம்' - அ.பெ.இரவிச்சந்திரன், 'விளக்குத்தூண் போல் மக்கள்' - பா.செயப்பிரகாசம், 'கலாச்சாரக் கொடுங்கோன்மை' - ராஜ்கௌதமன், 'தெபாகா இயக்கம்' - இரா.ப.அண்ணாதுரை, 'தலித் அரங்கம்' - க.பஞ்சாங்கம், 'பின்னைக் காலனியம்' - ந.முத்துமோகன், பல்வேறு சமூகக் குழுக்கள் மீதான உலகமயமாக்களின் தாக்கம் குறித்த கட்டுரை 'உள்ளாடையையும் அவிழ்த்துப்போடு' - அரங்க குணசேகரன், 'சித்த மருத்துவம்' தொடர்பான - ப.உ.லெனின் தொடர் போன்ற முக்கியமான கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

4 ஆம் இதழ் (பிப் 06) பழங்குடியினர் º¢றப்பிதழாக வெளிவந்துள்ளது. இதில் 'பழங்குடிகளின் தொப்புள் கொடிமண்' - ச.பாலமுருகன், 'இருண்டு கிடக்கும் இருளர்கள் வாழ்க்கை' - இரா.முருகப்பன், 'இன்றைய பழங்குடிகளின் நிலை' - பெ.சண்முகம், 'பனான் அல்ஜிரிய வாழ்வும் விடுதலையும்' - சூரிய நாகப்பன், 'தமிழக பழங்குடியினரின் வாழ்வுரிமைப் போர்' - நா.நஞ்சப்பன், 'வனமும் பழங்குடியினரின் வாழ்வுரிமைப் போர்' - நா.நஞ்சப்பன், 'வனமும் பழங்குடிகளும்' - வி.பி.குணசேகரன் எனப் பழங்குடிகளைப் பற்றிய முக்கியமான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஓவியர் சந்Ðருவின் நேர்காணலும் இதழ் 2இல் வெளியாகியுள்ளது. என்.டி.ராஜ்குமார், சல்மா, இரவீந்தரபாரதி, தி.பரமேஸ்வரி, பழமலய், விழி.பா.இதயவேந்தன், மாலதிமைத்ரி, நிகரகவி, பெ.அன்பு போன்றோரது கவிதைகள் வெளியாகியுள்ளன.

சலவைத் தொழிலாளர்களின் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் வெளிவந்தாலும் இது சமூக விடுதலைக்கான எழுத்துக்களை தாங்கியே வெளிவருகிறது. தமிழின் முக்கிய படைப்பாளிகளுடன் புதியவர்களும் இவ்விதழில் எழுதிவருகின்றனர். இந்த அறக்கட்டளையில் பணியாற்றுபவர்கள் மனித உரிமைகளுக்கான மீட்பு போராட்டங்களில் பங்கெடுத்த பெருமைக்குரியவர்கள்.

"மக்களோடு முØமையாக
இணைந்து கொள்ளாமல்
அறிவு ஜீவியும் கலைஞனும்
போராட்டத்திற்கு வெளியில்
எந்த நிலைப்பாட்டையும்
மேற்கொள்ள முடியாது" - இது போன்ற சேகுவேராவின் சிந்தனைகள் அவ்வப்போது இவ்விதழில் வெளியிடப் படுகின்றன.


ஆசிரியரைப் பற்றி...

தற்போது 55 வயதாகும் த.ம.பிரகா‰ ஒரு சலவைத் தொழிலாளி. பள்ளிப்படிப்பு கூடப் படிக்க இயலாமல் போனவர், இவ்விதழை நடத்துகிறார் என்பது வியப்பளிக்கிறது. அரசியல் கட்டுரைகள் எழுதிவரும் இவர், "இடதுசாரிகளை ஐக்கியப் படுத்துவதே உழைப்பவர் ஆயுதத்தின் குறிக்கோள்" என்கிறார். தமிழ் இலக்கிய இதழியில் வரலாற்றில் முக்கிய நிகழ்வு 'உழைப்பவர் ஆயுதம்'.

சந்தா விவரம் :

தனி இதழ் - ரூ. 15.00
ஓராண்டு சந்தா - ரூ. 130.00
தொடர் சந்தா - ரூ. 1000.00
மாணவர்களுக்கு தனி இதழ் - ரூ. 10.00
ஆண்டுச் சந்தா - ரூ. 100.00

முகவரி :

ஆசிரியர்,
உழைப்பவர் ஆயுதம்,
199, குறிஞ்சி வீதி,
தந்தை பெரியார் நகர்,
திருவண்ணாமலை - 606 601.
தொலை பேசி - 04175 - 251980
செல்பேசி - 9842307821.

No comments: