"1996 ஆம் ஆண்டு அது நிகழ்ந்தது. அமெரிக்காவிலிருக்கும் ஜான்
ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் ஜாக்ஸ்டெரிடா என்பவர் உரையாற்றியபோது அது நடந்தது. நிர்-நிர்மாணம் (De-Construction) என்ற வார்த்தையை முதன் முதலாக அவர் உச்சரித்தபோது ஒரு அதிசயம் போல் அது நேர்ந்தது. யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் டெரிடா என்ற அந்த இளம் பேராசிரியர் அதுவரை அறியப்பட்டிருந்த மேற்கத்திய தத்துவ கலை இலக்கிய வரலாற்றை தலைகீழாகக் கொட்டி கவிழ்த்த போது பார்வையாளர்கள் தங்கள் கால்களுக்குக் கீழே இருந்த தரை நழுவியதை உணர்ந்தார்கள். அன்று முதல் பின்நவீனத்துவம் என்ற பூதம் உலகத்தை பிடித்தாட்ட வந்திருக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள்"1930 ஆம் ஆண்டில் பிரான்சின் ஆதிக்கத்துக்குட்பட்ட அல்ஜீரியாவில் யூதப் பெற்றோருக்குப் பிறந்து உலக பின் நவீனத்துவச் சிந்தனையாளர் வரிசையில் தவிர்க்க முடியாத பெயராக நிலைத்துவிட்ட 'டெரிடா'வைப் பற்றிய மேற்கண்ட பதிவு 'டெரிடா'வின் மறைவையொட்டி 'பன்முகம் அக்டோபர்-டிசம்பர் 2004' இதழில் பதிவாகியுள்ளது.
இப்படி பின் நவீனத்துவம் சார்ந்த அதன் அனைத்துலக நிகழ்வுகளையும் தமிழ் வாசகர்களுக்குத் தரும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கிறது 'பன்முகம்' கலை இலக்கியக் கோட்பாட்டுக் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் எம்.ஜி.சுரேஷ். பதிப்பாளர் ஆர். ரவிச்சந்திரன். முதல் இதழ் 2001ஆம் ஆண்டு செப்டம்பர்-நவம்பர் இதழாக வெளிவந்தது. இதுவரை 16 இதழ்கள் வெளிவந்துள்ளன. பின் நவீனத்துவம் சார்ந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டாலும், முன்னோர்களின் படைப்புகளை நிராகரிக்காமல் நவீன படைப்புகளையும் ஒருங்கே வெளியிட்டு வருகிறது பன்முகம். அவ்வப்போது சில முக்கியமான சிறப்பிதழ்களையும் வெளியிட்டு வருகிறது.
ஏழாவது இதழ்(ஏப்ரல்-ஜூன் 2003) க.நா.சு. நினைவு சிறப்பிதழாக வெளிவந்தது. பிறகு சிறுகதைச் சிறப்பிதழ் (ஜூலை-செப்டம்பர் 2003), ஜெம் ஜாய்ஸ் சிறப்பிதழ் (ஜூலை-செப்டம்பர் 2004), எட்கர் ஆலன்போ சிறப்பிதழ் (ஜனவரி-மார்ச் 2005) எனத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
நவீன இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ரமேஷ்:பிரேம், யுவன் சந்திரசேகர், மாலதி மைத்ரி,பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் தொடர்ந்து பன்முகத்தில் எழுதி வருகின்றனர்."பரிசோதனை முயற்சிப் பிரதிகளை வெளியிடுவது பன்முகத்தின் முக்கிய அம்சமாகும்" என்கிறார், எம்.ஜி.சுரேஷ். டாடாயிசம், சர்ரியலிசம், கியூபிசம் போன்ற இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய எம்.ஜி. சுரேஷின் தொடர் முக்கியமானதாகும்.
"கோட்பாடுகள் (இசங்கள்) தமிழில் ஒதுக்கப்படுகிறது. இலக்கியத்திற்குத் தொடர்பு இல்லாதது என்று ஒதுக்கிவிடும் பொறுப்பற்ற தன்மை தமிழில் உள்ளது. உண்மையான இலக்கியம் என்பது கோட்பாடுகளை மீறி நிற்பது என நினைக்கிறார்கள். கோட்பாடு பற்றிய உணர்வு வேண்டும் என்பதால் இத்தொடரை எழுதினேன்" என்கிறார் எம்.ஜி.சுரேஷ்.
சிறந்த மொழிபெயர்ப்புக் கதைகளையும் கவிதைகளையும் வெளியிட்டு வருகிறது பன்முகம்.'பின் நவீனத்துவக் கவிதைகள் (Post modern poetry), 'மீ பிரதிக் கவிதைகள்' (Hyper text) போன்ற புதிய வகைமை கவிதைகளையும் அறிமுகம் செய்து வருகிறது 'பன்முகம்'.
'சிஸிபஸ்' போன்ற சர்ச்சைக்குரிய கதையும் வெளிவந்துள்ளது. பன்முகத்தின் பதிப்பாளர் ரவிச்சந்திரன் 'புதுப்புனல்' என்ற பதிப்பகம் நடத்தி வருகிறார்.
பிரேம்: ரமேஷின் குறுநாவலான 'கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்', ரிஷியின் 'என் உனக்கு' கவிதைத் தொகுப்பையும், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் பெண்ணிய நாவலான 'நாளைய மனிதர்கள்', கோவை ஞானியின் 'மார்க்ஸியத்திற்கு அழிவில்லை' போன்றவை புதுப்புனலின் முக்கிய வெளியீடுகளாகும். அத்துடன் எம்.ஜி. சுரேஷின் சமீபகால அனைத்து நாவல்களையும் வெளியிட்டு வருகிறது புதுப்புனல்.
ஆசிரியர் எம்.ஜி. சுரேஷைப் பற்றி....
எம்.ஜி. சுரேஷ் பின் நவீனத்துவ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். நாவல், சிறுகதை, கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று முழுநேர இலக்கியவாதியாக இயங்கி வருகிறார். இவரது 'இரண்டாவது உலகைத் தேடி' என்கிற சிறுகதைத் தொகுப்பு 1981-இல் வெளிவந்தது.
1984-இல் 'தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக் கூடுகள்' எனும் நாவலும், 1985-இல் 'கான்கிரீட் வானம்' என்கிற நாவலும் 1998-இல் 'கனவுலகவாசியின் நனவு குறிப்புகள்' எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. இவை நான்கும் நவீனத்துவ படைப்புகளாகும்.
'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்' (1999), 'அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்'(2000), 'சிலந்தி' (2001), 'யுரேகா என்றொரு நகரம்'(2002), '37'(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும் 'பின்நவீனத்துவம் என்றால் என்ன?'(2004) என்கிற நூலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன.
இனி அவருடன்....
பின் நவீனத்துவத்திற்கென்று இதழ் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
"பின் நவீனத்துவத்திற்கென்று அ. மார்க்ஸ், ரவிக்குமார் நடத்திய 'நிறப்பிரிகை', நாகர்ஜூனாவின் 'வித்தியாசம்', சாருநிவேதிதாவின் 'சிதைவு', பிரேம்: ரமேஷின் 'கிரணம்' முதலிய இதழ்கள் வெளிவந்தன. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவை நின்று போயின. கல்குதிரை, நிகழ் போன்ற இதழ்களில் பின்நவீனத்துவம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பின்நவீனத்துவத்திற்கான விவாதத்தளம் வேண்டும் என்பதால் பன்முகத்தைத் தொடங்கினேன். பின்நவீனத்துவம் குறித்து பேச வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டாலும் நேரடியாக பின் நவீனத்துவ இதழாக அறிவிக்காமல் 'கலை இலக்கியக் கோட்பாட்டு இதழ்' என்றுதான் முதலில் ஆரம்பித்தேன்.
ஏனென்றால் பின்நவீனத்துவம் குறித்து ஒரு தவறான புரிதல் தமிழ்ச் சூழலில் நிலவியது. குடும்பத் தகர்ப்பு, ஒழுக்க விழுமியங்கள் மீது அதிர்ச்சி மதிப்பீடு என பின்நவீனத்துவம் புரிந்து கொள்ளப்பட்டதால் முன் தீர்மானத்துடன் நிராகரித்துவிடுவார்கள் என்பதால் இப்படிச் செய்தேன். நாளடைவில்தான் பின்நவீனத்துவ இதழாக அறியப்பட்டது".
இதழ் நடத்துவம் அனுபவம் எப்படி இருக்கிறது?
முன்பு எனக்கு பல இலக்கியவாதிகள் நண்பர்களாக இருந்தார்கள். இந்த இதழை ஆரம்பித்தப் பிறகு அவர்களெல்லாம் எதிரிகளாகிவிட்டார்கள். நான் ¾னியாக இருந்தபோது பல நண்பர்கள் இருந்தார்கள்.
இப்போது என்னை 'Post modernist' குழுவில் ஒதுக்கிவிட்டார்கள். இது தவிர்க்க முடியாதது. இதை நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை என்கிறார் எம்.ஜி. சுரேஷ்.
புதிய கோட்பாடுகள் குறித்து அறிது கொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டிய இதழாக பன்முகம் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தனி இதழ் ரூ25/
ஆண்டுச் சந்தா ரூ 100/
வெளிநாடுகளுக்கு ஆண்டுச் சந்தா ரூ 400/
படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:
புதுப்புனல்
5/1, பழனி ஆண்டவர் கோயில் தெரு,
முதல் மாடி, அயனாவரம்,
சென்னை- 600 023.
மின்னஞ்சல்:panmugam@yahoo.காம்
நன்றி : அந்திமழை
Wednesday, January 14, 2009
நடவு
".....
ஏதாவது காரணம் சொல்லி
அடிக்கடி சந்திக்கும்
உன் தோழியரின் முகங்கள்
அச்சுறுத்தவில்லை என் இரவுகளை
எப்போதோ சந்தித்த
என் பள்ளிப் பிராயத்து நñபனை
இப்போதும் நான் சந்திப்பதாக
நீ சந்தேகப்படும் வரை".
ஆணாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தும் புதிய மாதவியின் ' கணவரின் தோழியர்' எனும் இக்கவிதை நடவு-ஜூலை'05 இதழில் வெளியாகியுள்ளது."
"மணிமுத்தாற்றங்கரையிலிருந்து முதல் படைப்பிலக்கியக் குரல் எழுகிறது". என்கிற முழக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடவின் முதல் இதழ் வெளி வந்தது. இது வரை (ஜூலை'05) 13 இதழ்கள் வெளிவந்துள்ளன.
இவ்விதழின் ஆசிரியர் ஜி.டி. என்கிற கோ. தெய்வசிகாமணி.ஆசிரியர் குழு, தமிழ்ச் சேரன், அரசிளங்குமரன்.
சிறுகதை,கவிதை, கட்டுரை, கலைகள் பற்றிய விமர்சனம் எனத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.சினிமா ரசிகர் மன்ற செயல்பாடுகள், மனித உரிமைப் பிரச்சனைகள்,பாசிசமயமாகிவரும் சமூக அமைப்பு எனப் பொதுவான சமூகப் பிரச்சினைகள் குறித்த கட்டுரைகளும் இதில் வெளிவருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் வீரப்பன் பெயரால் அதிரடிப்படை நடத்திய அத்துமீறல்கள் குறித்து " குருதி உறைந்த பூமி", "நிழல் தேடும் பாதங்கள்", "சில இடத்தில்" ஆகிய சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறது.
காவல் துறையின் அத்துமீறல்கள் குறித்த படைப்புகளையும் நடவு வெளியிட்டு வருகிறது." தொடர்ந்து தரமான கவிஞர்களையும்,கலைஞர்களையும் உருவாக்குவதை எதிர்காலத் திட்டமாகக் கொண்டு நடவு செயல்படுகிறது.
இதன் ஆசிரியர் ஜீ. டி. கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
'நடவு' வின் நோக்கம்..
"வட தமிழ் நாட்டில் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது,சமூக விழிப்புணர்வையும்,நல்லிணக்கத்தையும் வளர்ப்பது, மாற்றுக் கலாச்சரத்தை உருவாக்குவது. அத்துடன் விளிம்பு நிலை,கலை, இலக்கிய வளர்ச்சி, அதிகார வர்க்கத்துக்கு எதிரான மாற்றுக் குரல் ஆகியனவற்றை மையப்படுத்தி எங்கள் இதழ் பயணித்துக் கொண்டிருக்கிறது. அச்சுக்கூட வசதியின்மையால் வணிக நோக்கில் இதழைக் கொண்டு செல்லமுடியவில்லை.வாசகர்களிடமும் பரவலாக்க முடியவில்லை" என்கிறார்.
சந்தா விபரம்:
தனி இதழ்: ரூ 15/-
ஆண்டு சந்தா : ரூ 60/-
படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப முகவரி:
கோ. தெய்வசிகாமணி
269, காமராஜ் நகர்,
ஆலடி சாலை,
விருத்தாசலம்,606001
தொலைபேசி: 04143- ௨௬௧௭௯௪
நன்றி : அந்திமழை
ஏதாவது காரணம் சொல்லி
அடிக்கடி சந்திக்கும்
உன் தோழியரின் முகங்கள்
அச்சுறுத்தவில்லை என் இரவுகளை
எப்போதோ சந்தித்த
என் பள்ளிப் பிராயத்து நñபனை
இப்போதும் நான் சந்திப்பதாக
நீ சந்தேகப்படும் வரை".
ஆணாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தும் புதிய மாதவியின் ' கணவரின் தோழியர்' எனும் இக்கவிதை நடவு-ஜூலை'05 இதழில் வெளியாகியுள்ளது."
"மணிமுத்தாற்றங்கரையிலிருந்து முதல் படைப்பிலக்கியக் குரல் எழுகிறது". என்கிற முழக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடவின் முதல் இதழ் வெளி வந்தது. இது வரை (ஜூலை'05) 13 இதழ்கள் வெளிவந்துள்ளன.
இவ்விதழின் ஆசிரியர் ஜி.டி. என்கிற கோ. தெய்வசிகாமணி.ஆசிரியர் குழு, தமிழ்ச் சேரன், அரசிளங்குமரன்.
சிறுகதை,கவிதை, கட்டுரை, கலைகள் பற்றிய விமர்சனம் எனத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.சினிமா ரசிகர் மன்ற செயல்பாடுகள், மனித உரிமைப் பிரச்சனைகள்,பாசிசமயமாகிவரும் சமூக அமைப்பு எனப் பொதுவான சமூகப் பிரச்சினைகள் குறித்த கட்டுரைகளும் இதில் வெளிவருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் வீரப்பன் பெயரால் அதிரடிப்படை நடத்திய அத்துமீறல்கள் குறித்து " குருதி உறைந்த பூமி", "நிழல் தேடும் பாதங்கள்", "சில இடத்தில்" ஆகிய சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறது.
காவல் துறையின் அத்துமீறல்கள் குறித்த படைப்புகளையும் நடவு வெளியிட்டு வருகிறது." தொடர்ந்து தரமான கவிஞர்களையும்,கலைஞர்களையும் உருவாக்குவதை எதிர்காலத் திட்டமாகக் கொண்டு நடவு செயல்படுகிறது.
இதன் ஆசிரியர் ஜீ. டி. கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
'நடவு' வின் நோக்கம்..
"வட தமிழ் நாட்டில் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது,சமூக விழிப்புணர்வையும்,நல்லிணக்கத்தையும் வளர்ப்பது, மாற்றுக் கலாச்சரத்தை உருவாக்குவது. அத்துடன் விளிம்பு நிலை,கலை, இலக்கிய வளர்ச்சி, அதிகார வர்க்கத்துக்கு எதிரான மாற்றுக் குரல் ஆகியனவற்றை மையப்படுத்தி எங்கள் இதழ் பயணித்துக் கொண்டிருக்கிறது. அச்சுக்கூட வசதியின்மையால் வணிக நோக்கில் இதழைக் கொண்டு செல்லமுடியவில்லை.வாசகர்களிடமும் பரவலாக்க முடியவில்லை" என்கிறார்.
சந்தா விபரம்:
தனி இதழ்: ரூ 15/-
ஆண்டு சந்தா : ரூ 60/-
படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப முகவரி:
கோ. தெய்வசிகாமணி
269, காமராஜ் நகர்,
ஆலடி சாலை,
விருத்தாசலம்,606001
தொலைபேசி: 04143- ௨௬௧௭௯௪
நன்றி : அந்திமழை
குழலோசை
"இவ்விதழ் பல்சுவை இதழாக வெளிவருகிறது. கலை, இலக்கியம், சமூகம், மொழி, தேசம், தெய்வீகம், போன்றப் பல சுவைகள் இவ்விதழில் காணப்படும். ஏதேனும் இÉம் சார்ந்தப் பார்வைக்கோ, இயக்கம் சார்ந்த சிந்தனைகளுக்கோ, வலுக்கொடுக்கும் முயற்சி இவ்விதழில் காணக் ¸¢டைக்காது. இப்பிரபஞ்ச இயக்கத்தில், இது இப்படித்தான் என்று எதையும் தீர்மானமாக முடிவு செய்துவிட முடியாது. எது எப்படியும் மாறும். அதற்கான சூழலை காலம் கொண்டு வந்து சேர்க்கும்.
முடிந்தவரை இவ்விதழ் சக மனிதனின் துயர்களையபாடுபடும். அவனின் மகிழ்ச்சி, துக்கம், இயலாமை, கோபம் இவற்றையே எதிரொலிக்கும். சக மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களை அவிழ்க்க அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொள்ளும்" என்கிற அறிவிப்புடன் செப்டம்பர் 2005இல் வெளிவந்த இதழ் குழலோசை. இதன் ஆசிரியர் வெ.கோகுலமுத்தரசன். கவிதை, சிறுகதை, நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு, நேர்காணல், கட்டுரை என வெளியாகி வருகின்றன.
தற்போது இவ்விதழ் கணிப்பொறி ஒளியச்சு நகலில் வெளி வருகிறது. வண்ணைசிவா, தங்கம் சரவணன், சூரியராஜன், செந்தூரம் ஜெகதீ‰, பாக்யம் சங்கர், இர.முனுசாமி, கோ.மகேசன், வெ.கோகுலமுத்தரசன், ச.அறிவழகன் போன்றோர்கள் இவ்விதழில் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.
சிறிய அளவில் இவ்விதழ் வெளிவந்தாலும் தரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
முகவரி :
குழலோசை,
146, இரண்டாவது தெரு,
நேதாஜி நகர்,
தண்டையார்பேட்டை,
சென்னை - 81.
சந்தா விவரம் :
இதழ் நன்கொடை - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 50.00
நன்றி : அந்திமழை
முடிந்தவரை இவ்விதழ் சக மனிதனின் துயர்களையபாடுபடும். அவனின் மகிழ்ச்சி, துக்கம், இயலாமை, கோபம் இவற்றையே எதிரொலிக்கும். சக மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களை அவிழ்க்க அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொள்ளும்" என்கிற அறிவிப்புடன் செப்டம்பர் 2005இல் வெளிவந்த இதழ் குழலோசை. இதன் ஆசிரியர் வெ.கோகுலமுத்தரசன். கவிதை, சிறுகதை, நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு, நேர்காணல், கட்டுரை என வெளியாகி வருகின்றன.
தற்போது இவ்விதழ் கணிப்பொறி ஒளியச்சு நகலில் வெளி வருகிறது. வண்ணைசிவா, தங்கம் சரவணன், சூரியராஜன், செந்தூரம் ஜெகதீ‰, பாக்யம் சங்கர், இர.முனுசாமி, கோ.மகேசன், வெ.கோகுலமுத்தரசன், ச.அறிவழகன் போன்றோர்கள் இவ்விதழில் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.
சிறிய அளவில் இவ்விதழ் வெளிவந்தாலும் தரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
முகவரி :
குழலோசை,
146, இரண்டாவது தெரு,
நேதாஜி நகர்,
தண்டையார்பேட்டை,
சென்னை - 81.
சந்தா விவரம் :
இதழ் நன்கொடை - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 50.00
நன்றி : அந்திமழை
அதிர்வு
" 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றுரைத்த வள்ளலாரின் காலடித் தடங்கள் பதித்த கடலூர் மண்ணிலிருந்து தமிழின உறவுகள் கைகோர்க்கும் முற்போக்கு முயற்சிகளோடு இதோ உங்களின் கைகளில் கொடுத்திருக்கின்றோம் முதல் அதிர்வினை" என்கிற அறிவிப்புடன் Êசம்பர் 2005இல் இருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது 'அதிர்வு' - இலக்கியப் பண்பாட்டு மாத இதழ். இதன் ஆசிரியர், தடா.நல்லரசன், ஆசிரியர் குழு : புகழ் மங்கான், கு.பரிதிவாணன், வி.சு.அன்புச்செல்வன், சிவா.கார்த்திகேயன், ஏழுமலை, கா.வெற்றியழகன்.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல்விமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு என வெளியாகி வருகின்றன. பிடல்காஸ்ட்ரோ, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களது சிந்தனைகள் ஆங்காங்கே வெளியிடப் படுகின்றன. 'தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பகுதியில் வழக்கிலுள்ள பிறமொழிச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்கள் வழங்கப்படுகின்றன. படைப்புகள் பெரும்பாலும் அரசியல் விழிப்புணர்வூட்டும் தன்மையுடன் வெளிவருகின்றன. தலித்தியம், தமிழ் தேசியம், மார்க்சியம் சார்ந்த கோட்பாடுகளை வெளிப்படுத்துவனவாக படைப்புகள் வெளிவருவது அதிர்வின் தனித்தன்மை எனலாம். மிகவும் முற்போக்கான கருத்துகளை தமிழின் தொன்மை வடிவங்களான ஒப்பாரி, தாலாட்டு வடிவில் கவிதைகள் வெளிவருவதும் அதிர்வின் சிறப்பாகும். அவ்வகையில் முதல் இதழில் வெளியான 'எத்தனை முறைதான் அழுவது' எனும் தலித்தியப் பாடலும், இரண்டாம் இதழில் வெளியான 'ஈழத்தாலாட்டு' பாடலும் குறிப்பிடத்தக்கன.
'கெடல் எங்கே தமிழர் நலம்
அங்கெல்லாம் சென்றுகிளர்îசி செய்க' என்கிற
பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிப் பாடலோடு அவரது படமும் முதல் இதழின் அட்டையில் வெளியானது. "நாணல்கள் தலையாட்டும் ஆற்றங்கரைகளோடு, மூலிகைச் செடிகள் படர்ந்திருக்கும், வாய்க்கால், வரப்புகள் என பசுமைபூத்த இலைகள் வருடும் இயற்கையோடு இயற்கையாய் தமிழ் கிராமங்கள்தோறும் இலக்கிய படைப்புகளைப் பதிவு செய்யமுடியாமல் அடைகாத்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும், நகரங்கள் தோறும் நச்சுப் புகை நுகர்ந்து நான்கு சுவற்றுகள் சுயநலத்தோடு தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தூங்கி வழிகின்ற இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும் பதிவு செய்து அவர்களை மெருகேற்றுவதே இதழின் நோக்கமும் தாகமும் ஆகும்" என இதழின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது முதல் இதழின் தலையங்கம். முதல் இதழில் வெளியாகியுள்ள இள.புகழேந்தியின் 'கடவுளைப் படைத்தவன் மனிதன்', கா.தமிழ்வேங்கையின் 'திரைப்படத்தில் வன்முறை', பழநெடுமாறனின் 'சுவடுகள்' இரண்டாம் இதழில் வெளியாகியுள்ள வேல்தொண்டைமானின் 'தீர்வினைத்தேடி' ஆகியவை முக்கியமான கட்டுரைகளாகும்.
கா.தமிழ்வேங்கை, பைந்தமிழ்பாவை, அ.மோகன்ராசு, க.பூபாலன், பித்தன்கல்கி, ஏ.தனு‰கோடி, கு.பரிதிவாணன், ஆல்பேட்டைபாபு, ந.பர்னாட் பாத்திமா, அமுதராஜ், இரா.மோகன்தாசு, ந.சுரே‰ நாராயணன், வெண்ணிலவன், புவனாதனு‰கோடி, இரா.அப்பாஜி, தொ.எழில்நிலவன், கி.பாலு போன்றோரது கவிதைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. தெலுங்கானாவை சேர்ந்த அல்லம் ராசைய்யாவின் 'புயல்' மொழிபெயர்ப்புச்சிறுகதை இரண்டாவது இதழில் வெளியாகியுள்ளது.
சில நேரங்களில், நடையைக் குறித்து அக்கறை கொள்ளாமல் கருத்தை மட்டும் வெளிப்படுத்தும் கவிதைகள் வெளியிடப்படுகின்றன. அரசியலுடன், வெளிப்படுத்தும் முறையும் முக்கியம் என்பதைக் கவனத்தில் கொண்டு கவிதைகளை கறாராகத் தேர்வு செய்து வெளியிட்டால் அதிர்வுக்கு இன்னும் 'அதிர்வு' கூடும்.
ஆசிரியர் பற்றி....
விதைநெல், வாக்குமூலம், முகங்கள் கவிதைத் தொகுப்பும், 'தழும்புகள்' ஹைக்கூ அந்தாதி தொகுப்பு, 'திசைகள்' எனும் நவீன ஆத்திச்சூடி தொகுப்பும் எழுதியிருக்கும் தடாநல்லரசன், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடுள்ளவர்.
சந்தா மற்றும் முகவரி :
தனி இதழ் - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 100.00
முகவரி :
4/7, சபாபதி தெரு,
மஞ்சகுப்பம்,
கடலூர் - 607 001.
பேச - 04142 284184, ௨௩0௪௭௭
நன்றி : அந்திமழை
கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல்விமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு என வெளியாகி வருகின்றன. பிடல்காஸ்ட்ரோ, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களது சிந்தனைகள் ஆங்காங்கே வெளியிடப் படுகின்றன. 'தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பகுதியில் வழக்கிலுள்ள பிறமொழிச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்கள் வழங்கப்படுகின்றன. படைப்புகள் பெரும்பாலும் அரசியல் விழிப்புணர்வூட்டும் தன்மையுடன் வெளிவருகின்றன. தலித்தியம், தமிழ் தேசியம், மார்க்சியம் சார்ந்த கோட்பாடுகளை வெளிப்படுத்துவனவாக படைப்புகள் வெளிவருவது அதிர்வின் தனித்தன்மை எனலாம். மிகவும் முற்போக்கான கருத்துகளை தமிழின் தொன்மை வடிவங்களான ஒப்பாரி, தாலாட்டு வடிவில் கவிதைகள் வெளிவருவதும் அதிர்வின் சிறப்பாகும். அவ்வகையில் முதல் இதழில் வெளியான 'எத்தனை முறைதான் அழுவது' எனும் தலித்தியப் பாடலும், இரண்டாம் இதழில் வெளியான 'ஈழத்தாலாட்டு' பாடலும் குறிப்பிடத்தக்கன.
'கெடல் எங்கே தமிழர் நலம்
அங்கெல்லாம் சென்றுகிளர்îசி செய்க' என்கிற
பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிப் பாடலோடு அவரது படமும் முதல் இதழின் அட்டையில் வெளியானது. "நாணல்கள் தலையாட்டும் ஆற்றங்கரைகளோடு, மூலிகைச் செடிகள் படர்ந்திருக்கும், வாய்க்கால், வரப்புகள் என பசுமைபூத்த இலைகள் வருடும் இயற்கையோடு இயற்கையாய் தமிழ் கிராமங்கள்தோறும் இலக்கிய படைப்புகளைப் பதிவு செய்யமுடியாமல் அடைகாத்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும், நகரங்கள் தோறும் நச்சுப் புகை நுகர்ந்து நான்கு சுவற்றுகள் சுயநலத்தோடு தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தூங்கி வழிகின்ற இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும் பதிவு செய்து அவர்களை மெருகேற்றுவதே இதழின் நோக்கமும் தாகமும் ஆகும்" என இதழின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது முதல் இதழின் தலையங்கம். முதல் இதழில் வெளியாகியுள்ள இள.புகழேந்தியின் 'கடவுளைப் படைத்தவன் மனிதன்', கா.தமிழ்வேங்கையின் 'திரைப்படத்தில் வன்முறை', பழநெடுமாறனின் 'சுவடுகள்' இரண்டாம் இதழில் வெளியாகியுள்ள வேல்தொண்டைமானின் 'தீர்வினைத்தேடி' ஆகியவை முக்கியமான கட்டுரைகளாகும்.
கா.தமிழ்வேங்கை, பைந்தமிழ்பாவை, அ.மோகன்ராசு, க.பூபாலன், பித்தன்கல்கி, ஏ.தனு‰கோடி, கு.பரிதிவாணன், ஆல்பேட்டைபாபு, ந.பர்னாட் பாத்திமா, அமுதராஜ், இரா.மோகன்தாசு, ந.சுரே‰ நாராயணன், வெண்ணிலவன், புவனாதனு‰கோடி, இரா.அப்பாஜி, தொ.எழில்நிலவன், கி.பாலு போன்றோரது கவிதைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. தெலுங்கானாவை சேர்ந்த அல்லம் ராசைய்யாவின் 'புயல்' மொழிபெயர்ப்புச்சிறுகதை இரண்டாவது இதழில் வெளியாகியுள்ளது.
சில நேரங்களில், நடையைக் குறித்து அக்கறை கொள்ளாமல் கருத்தை மட்டும் வெளிப்படுத்தும் கவிதைகள் வெளியிடப்படுகின்றன. அரசியலுடன், வெளிப்படுத்தும் முறையும் முக்கியம் என்பதைக் கவனத்தில் கொண்டு கவிதைகளை கறாராகத் தேர்வு செய்து வெளியிட்டால் அதிர்வுக்கு இன்னும் 'அதிர்வு' கூடும்.
ஆசிரியர் பற்றி....
விதைநெல், வாக்குமூலம், முகங்கள் கவிதைத் தொகுப்பும், 'தழும்புகள்' ஹைக்கூ அந்தாதி தொகுப்பு, 'திசைகள்' எனும் நவீன ஆத்திச்சூடி தொகுப்பும் எழுதியிருக்கும் தடாநல்லரசன், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடுள்ளவர்.
சந்தா மற்றும் முகவரி :
தனி இதழ் - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 100.00
முகவரி :
4/7, சபாபதி தெரு,
மஞ்சகுப்பம்,
கடலூர் - 607 001.
பேச - 04142 284184, ௨௩0௪௭௭
நன்றி : அந்திமழை
'சம உரிமை' மாத இதழ்
கவிக்கோ அப்துல் ரஹ்மானைக் கொண்டு 'சம உரிமை' மாத இதழ் பிப்ரவரி மாதம் முதல் வெளியிடப்பட இருப்பதாக இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.'சம உரிமை' மாத இதழில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்கள், சிறுபான்மையினரின் செய்திகள், சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெறும்.'சம உரிமை' மாத இதழை அனுப்ப தமிழகமெங்குமுள்ள ஜமாஅத்துகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் குறித்த முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இஸ்லாமிய இலக்கியக் கழகம்,எண் 27 உட்ஸ் சாலை,அண்ணா சாலை,சென்னை 600 002,தொலைபேசி : 044 28460127 / 9840040067,மின்னஞ்சல் முகவரி: ithayathulla@gmail.காம்
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
பிரம்மராஜன், கோணங்கி, பிரமிள்... மற்றும் ஒரு வேண்டுகோள்.
பிரம்மராஜன், கோணங்கி, பிரமிள்... மற்றும் ஒரு வேண்டுகோள்.
ஆர்வமுள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு உதவலாம்... உதவாமலும் போகலாம்... என்றாலும்... சிறு பத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது என மூத்த எழுத்தாளரான அசோகமித்திரன் அறிவித்துள்ள நிலையில் சில சிற்றேடுகள் இப்போது வீரியத்துடன் தமிழில் வர ஆரம்பித்திருக்கின்றன. ஆங்கிலத்தில் அவான் கார்ட் (Avant - garde) என்றொரு சொல் உண்டு. இது இலக்கிய சொல் என்றாலும் ராணுவ உருவகம் கொண்டது. இதன் அர்த்தம் 'இலக்கிய முன்னணிப்படை'.புதிய மற்றும் சோதனை ரீதியான படைப்பாக்கங்களை ஒருபோதும் வணிக எழுத்தாளர்களாலோ, நடு இதழ் எழுத்தாளர்களாலோ படைக்க முடியாது. அந்த இதழ்களை நிரப்பும் பக்கங்கள் அந்தவகை எழுத்துக்களை என்றுமே கோர்க்காது. இலக்கிய முன்னணி படையை சார்ந்த எழுத்தாளர்களாலேயே அந்தவகை படைப்பை படைக்க முடியும். அதற்கு சிறு பத்திரிகைகள் மட்டுமே இடம் கொடுக்கும். இது உலக இலக்கிய சரித்திரத்தின் அனைத்து கலைகளிலும் பதிவாகியிருக்கும் விஷயம். கண்டிப்பாக ஜாய்ஸின் 'யூலிஸிஸ்' நாவலோ அல்லது ராபர்ட் மியூஸிலின் 'நிர்க்குண மனிதன்' போன்ற நாவலோ அல்லது 'டிக் ஷ்னரி ஆஃப் கசார்ஸ்' பிரதியோ நடுப்பத்திரிகைகளில் வர வாய்ப்பேயில்லை.இப்படியான பின்நவீனத்துவ சூழலில் மீண்டும் தமிழில் சில சிறு பத்திரிகைகள்...ஆத்மாநாமின் 'ழ' பத்திரிகை வழியே வெளிச்சத்துக்கு வந்த கவிஞர் பிரம்மராஜனின் 'மீட்சி' சிற்றிதழை அவ்வளவு சுலபத்தில் யாரும் மறந்துவிட முடியாது. பிரம்மராஜனின் கவிதைகள் புரியவில்லை... என விமர்சனம் எழுந்தபோது நாகார்ஜுனன், அவரது கவிதைகளில் உள்ள முன் - பின் வார்த்தை விளையாட்டை கட்டுடைத்து, கலைத்து எழுதிய கட்டுரை இன்றளவும் தமிழின் சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் மீட்சியின் உலக கவிதைகள் தொகுப்பு பல கவிஞர்களுக்குள் வேகத்தை கிளப்பிய தொகுப்பு.அதே பிரம்மராஜன் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் 'நான்காம் பாதை' சிற்றிதழை ஆரம்பித்திருக்கிறார். முதல் இதழ் இப்போது வெளியாகியிருக்கிறது. தனியிதழ் ரூ. 50. ஆண்டுச் சந்தா ரூ. 200. கூரியில் செலவு தனி.தொடர்புக்கு A30, ASTC நகர், பென்னாகரம் சாலை, தருமபுரி - 636 703. தொலைபேசி எண்: 04342 - 281239. கைபேசி: 98941 41752 e - mail: bramoraj@yahoo.comஅடுத்து 'லயம்'. பிரமிளை முன்வைத்து இயங்கிய அதே 'லயம்' சிற்றிதழ்தான். பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. ஆசிரியர் மாறவில்லை. அதே கால சுப்ரமணியம்தான். பிரமிளின் பிரசுரமாகாத படைப்புகளையும் அவரை குறித்த விமர்சனங்களையும் 'லயம்' வெளியிட்டு வரும் என ஆசிரியர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரமிளின் பிரசுரமாகாத கவிதையொன்று இந்த இதழில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதை...பிலம்ஒப்புமைப் பின்னலின்நரம்பு முடிச்சுகளாய்நக்ஷத்ரங்கள் -அண்டத்தின் அநந்தங்கள்.அவற்றின்ஈர்ப்பு வெளிக் கோளங்கள்ஒன்றை ஒன்றுஊடுருவுகின்றன.ஜடத்தினுள் ஜடம் சிக்கிஎங்கோ ஒரு முடிச்சில்அதீத ஜடத் திணிப்பு.அதையே நோக்கிவளைகிறது புவனவெளி.பிரபஞ்ச நியதியில்பிறக்கிறது புரட்சி.ஒப்புமைப் பின்னல்கலைகிறது.ஒரு புள்ளி நோக்கிஅண்டத்தின்பரிமாணங்கள் சரிந்துஒரே ஒருநக்ஷத்திரத்தின் முடிச்சினுள்ளேவீழ்கிறது காலவெளி.ஒளிரும் ஒரு நக்ஷத்திரத்தின்ஜடம் ஒரு பொந்தாகிதன் ஒளியை அதுதானே கபளீகரிக்கிறது.வெளி வளைந்து குவிந்துவெளியில் பிறக்கிறதுஒரு பிலம்.(??? 1955)தனியிதழ் ரூ. 15. ஆண்டுச் சந்தா ரூ. 100.தொடர்புக்கு எஸ். விமலா, 155, கிழக்கு வீதி, நேரு நகர், சத்தியமங்கலம் - 638 402. தொலைபேசி எண்: 04295 - 220097. கைபேசி: 9442680619எந்த சிமிழுக்குள்ளும் அடங்காமல் இருக்கும் கோணங்கியின் 'கல்குதிரை', தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் தனியிடம் கொண்டது. அந்த இதழ் வெளியிட்ட மார்க்யூஸ் சிறப்பிதழும், உலக சிறுகதை தொகுப்பும் ஏற்படுத்திய அதிர்வு இன்றுவரை தொடர்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த இதழ் வரலாம்... வராமலும் போகலாம்... அப்படி வந்தால் எப்போது வரும் என்பது கோணங்கிக்கே தெரியாது...இந்த நிலையில் கோணங்கியின் ஒரு புத்தகம் வாசகனுக்காக காத்திருக்கிறது...வணிக இதழ்களிலோ, நடு இதழ்களிலோ எழுதாமல், விலைபோகாமல் சிறு பத்திரிகைகளில் மட்டுமே இயங்குவதை பிடிவாதமாக பின்பற்றி வரும் ஐகான், கோணங்கி. புரியாமல் எழுதுகிறார்... என்ற குற்றச்சாட்டு அவர் மீது காலம் காலமாக வீசப்பட்டு வருகிறது... இதற்கு கோணங்கி என்ன செய்வார்?அவரது சில சிறுகதைகளும், சில குறுநாவல்களும் இணைந்து 'இருள்ள மெளத்திகம்' என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. பின்னிணைப்பாக 'தன்னுடன் தன் நேர்காணல்' இணைக்கப்பட்டுள்ளது. தேவதச்சன், ந. நடராஜன், பூபதி, அறிவழகன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு கோணங்கி பதில் சொல்லியிருக்கிறார்.விலை: ரூ. 212. 'தென் திசை' பதிப்பகத்தின் ஒர் அங்கமான 'காதை' வெளியீடு.தொடர்புக்கு A19, Srinivasa reddy street, T. Nagar, Chennai - 600017. தொலைபேசி எண்: 044- 2433 8169. e - mail: kkbooks07@rediffmail.comஇறுதியாக... பதிவுலகை சேர்ந்த இருவருக்கு இந்தப் பதிவின் வழியே ஒரு கோரிக்கை. ஒருவர் ஜமாலன். 'காலக்குறி' சிற்றிதழை மீண்டும் அவர் ஆரம்பிக்க வேண்டும். அடுத்தவர் நாகார்ஜுனன். 'வித்தியாசம்' இதழை திரும்பவும் தமிழ் சூழலுக்கு அவர் கொண்டு வரவேண்டும். வருவார்கள். பின்நவீனத்துவசூழல் அவர்கள் இருவரையும் மீண்டும் சிற்றிதழை தொடங்க வைத்துவிடும்...
நன்றி: பைத்தியக்காரன்,
naayakan.blogspot.com/2008/03/blog-post_17.html
ஆர்வமுள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு உதவலாம்... உதவாமலும் போகலாம்... என்றாலும்... சிறு பத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது என மூத்த எழுத்தாளரான அசோகமித்திரன் அறிவித்துள்ள நிலையில் சில சிற்றேடுகள் இப்போது வீரியத்துடன் தமிழில் வர ஆரம்பித்திருக்கின்றன. ஆங்கிலத்தில் அவான் கார்ட் (Avant - garde) என்றொரு சொல் உண்டு. இது இலக்கிய சொல் என்றாலும் ராணுவ உருவகம் கொண்டது. இதன் அர்த்தம் 'இலக்கிய முன்னணிப்படை'.புதிய மற்றும் சோதனை ரீதியான படைப்பாக்கங்களை ஒருபோதும் வணிக எழுத்தாளர்களாலோ, நடு இதழ் எழுத்தாளர்களாலோ படைக்க முடியாது. அந்த இதழ்களை நிரப்பும் பக்கங்கள் அந்தவகை எழுத்துக்களை என்றுமே கோர்க்காது. இலக்கிய முன்னணி படையை சார்ந்த எழுத்தாளர்களாலேயே அந்தவகை படைப்பை படைக்க முடியும். அதற்கு சிறு பத்திரிகைகள் மட்டுமே இடம் கொடுக்கும். இது உலக இலக்கிய சரித்திரத்தின் அனைத்து கலைகளிலும் பதிவாகியிருக்கும் விஷயம். கண்டிப்பாக ஜாய்ஸின் 'யூலிஸிஸ்' நாவலோ அல்லது ராபர்ட் மியூஸிலின் 'நிர்க்குண மனிதன்' போன்ற நாவலோ அல்லது 'டிக் ஷ்னரி ஆஃப் கசார்ஸ்' பிரதியோ நடுப்பத்திரிகைகளில் வர வாய்ப்பேயில்லை.இப்படியான பின்நவீனத்துவ சூழலில் மீண்டும் தமிழில் சில சிறு பத்திரிகைகள்...ஆத்மாநாமின் 'ழ' பத்திரிகை வழியே வெளிச்சத்துக்கு வந்த கவிஞர் பிரம்மராஜனின் 'மீட்சி' சிற்றிதழை அவ்வளவு சுலபத்தில் யாரும் மறந்துவிட முடியாது. பிரம்மராஜனின் கவிதைகள் புரியவில்லை... என விமர்சனம் எழுந்தபோது நாகார்ஜுனன், அவரது கவிதைகளில் உள்ள முன் - பின் வார்த்தை விளையாட்டை கட்டுடைத்து, கலைத்து எழுதிய கட்டுரை இன்றளவும் தமிழின் சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் மீட்சியின் உலக கவிதைகள் தொகுப்பு பல கவிஞர்களுக்குள் வேகத்தை கிளப்பிய தொகுப்பு.அதே பிரம்மராஜன் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் 'நான்காம் பாதை' சிற்றிதழை ஆரம்பித்திருக்கிறார். முதல் இதழ் இப்போது வெளியாகியிருக்கிறது. தனியிதழ் ரூ. 50. ஆண்டுச் சந்தா ரூ. 200. கூரியில் செலவு தனி.தொடர்புக்கு A30, ASTC நகர், பென்னாகரம் சாலை, தருமபுரி - 636 703. தொலைபேசி எண்: 04342 - 281239. கைபேசி: 98941 41752 e - mail: bramoraj@yahoo.comஅடுத்து 'லயம்'. பிரமிளை முன்வைத்து இயங்கிய அதே 'லயம்' சிற்றிதழ்தான். பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. ஆசிரியர் மாறவில்லை. அதே கால சுப்ரமணியம்தான். பிரமிளின் பிரசுரமாகாத படைப்புகளையும் அவரை குறித்த விமர்சனங்களையும் 'லயம்' வெளியிட்டு வரும் என ஆசிரியர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரமிளின் பிரசுரமாகாத கவிதையொன்று இந்த இதழில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதை...பிலம்ஒப்புமைப் பின்னலின்நரம்பு முடிச்சுகளாய்நக்ஷத்ரங்கள் -அண்டத்தின் அநந்தங்கள்.அவற்றின்ஈர்ப்பு வெளிக் கோளங்கள்ஒன்றை ஒன்றுஊடுருவுகின்றன.ஜடத்தினுள் ஜடம் சிக்கிஎங்கோ ஒரு முடிச்சில்அதீத ஜடத் திணிப்பு.அதையே நோக்கிவளைகிறது புவனவெளி.பிரபஞ்ச நியதியில்பிறக்கிறது புரட்சி.ஒப்புமைப் பின்னல்கலைகிறது.ஒரு புள்ளி நோக்கிஅண்டத்தின்பரிமாணங்கள் சரிந்துஒரே ஒருநக்ஷத்திரத்தின் முடிச்சினுள்ளேவீழ்கிறது காலவெளி.ஒளிரும் ஒரு நக்ஷத்திரத்தின்ஜடம் ஒரு பொந்தாகிதன் ஒளியை அதுதானே கபளீகரிக்கிறது.வெளி வளைந்து குவிந்துவெளியில் பிறக்கிறதுஒரு பிலம்.(??? 1955)தனியிதழ் ரூ. 15. ஆண்டுச் சந்தா ரூ. 100.தொடர்புக்கு எஸ். விமலா, 155, கிழக்கு வீதி, நேரு நகர், சத்தியமங்கலம் - 638 402. தொலைபேசி எண்: 04295 - 220097. கைபேசி: 9442680619எந்த சிமிழுக்குள்ளும் அடங்காமல் இருக்கும் கோணங்கியின் 'கல்குதிரை', தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் தனியிடம் கொண்டது. அந்த இதழ் வெளியிட்ட மார்க்யூஸ் சிறப்பிதழும், உலக சிறுகதை தொகுப்பும் ஏற்படுத்திய அதிர்வு இன்றுவரை தொடர்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த இதழ் வரலாம்... வராமலும் போகலாம்... அப்படி வந்தால் எப்போது வரும் என்பது கோணங்கிக்கே தெரியாது...இந்த நிலையில் கோணங்கியின் ஒரு புத்தகம் வாசகனுக்காக காத்திருக்கிறது...வணிக இதழ்களிலோ, நடு இதழ்களிலோ எழுதாமல், விலைபோகாமல் சிறு பத்திரிகைகளில் மட்டுமே இயங்குவதை பிடிவாதமாக பின்பற்றி வரும் ஐகான், கோணங்கி. புரியாமல் எழுதுகிறார்... என்ற குற்றச்சாட்டு அவர் மீது காலம் காலமாக வீசப்பட்டு வருகிறது... இதற்கு கோணங்கி என்ன செய்வார்?அவரது சில சிறுகதைகளும், சில குறுநாவல்களும் இணைந்து 'இருள்ள மெளத்திகம்' என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. பின்னிணைப்பாக 'தன்னுடன் தன் நேர்காணல்' இணைக்கப்பட்டுள்ளது. தேவதச்சன், ந. நடராஜன், பூபதி, அறிவழகன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு கோணங்கி பதில் சொல்லியிருக்கிறார்.விலை: ரூ. 212. 'தென் திசை' பதிப்பகத்தின் ஒர் அங்கமான 'காதை' வெளியீடு.தொடர்புக்கு A19, Srinivasa reddy street, T. Nagar, Chennai - 600017. தொலைபேசி எண்: 044- 2433 8169. e - mail: kkbooks07@rediffmail.comஇறுதியாக... பதிவுலகை சேர்ந்த இருவருக்கு இந்தப் பதிவின் வழியே ஒரு கோரிக்கை. ஒருவர் ஜமாலன். 'காலக்குறி' சிற்றிதழை மீண்டும் அவர் ஆரம்பிக்க வேண்டும். அடுத்தவர் நாகார்ஜுனன். 'வித்தியாசம்' இதழை திரும்பவும் தமிழ் சூழலுக்கு அவர் கொண்டு வரவேண்டும். வருவார்கள். பின்நவீனத்துவசூழல் அவர்கள் இருவரையும் மீண்டும் சிற்றிதழை தொடங்க வைத்துவிடும்...
நன்றி: பைத்தியக்காரன்,
naayakan.blogspot.com/2008/03/blog-post_17.html
தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ் - மலேசியா
தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்
மலேசியத் தமிழ் இதழியல் துறையில், மறுவரவு மேற்கொண்டு மீண்டும் வந்துள்ளது 'தமிழ்நெறி' என்னும் தமிழ்த் தேசிய மாதிகை (மாத இதழ்). "தமிழைக் காப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்" என்ற முழக்கத்தோடு இந்தச் செப்தெம்பர் திங்களில் தமிழ்நெறி இதழ் வெளிவந்துள்ளது. தமிழ்நெறிச் சிந்தனைகளைத் தாங்கி தமிழ் மீட்புக்காகவும் காப்புக்காகவும் குரல்கொடுக்கும் ஏடாக வெளிவந்துள்ள 'தமிழ்நெறி' இதழை ஒவ்வொரு மலேசியத் தமிழனும் மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
தமிழ் மொழியின நலன் தொடர்பிலான பல அரிய செய்திகளையும் கட்டுரைகளையும் இந்த இதழ் தாங்கிவந்துள்ளது. அறிஞர் அண்ணா, பெரியார், மாவீரன் திலிபன் ஆகியோர் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், மாணவர்களுக்கான தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு வினாவிடை பகுதி, உளவியல் கட்டுரை, ஈழத்துக் கட்டுரை என பல்வேறு அரிய செய்திகளை உள்ளடக்கி மிகவும் தரமான தாள்களில் கவரும்படியாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. "தமிழ்நெறியின் வேலை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே. இது கருத்துப்பரப்பும் அறிவுசான்ற இதழ். எனவே, தமிழ், தமிழர் தொடர்பான அரிய செய்திகளைத் தேவையான கருத்துகளைத் தமிழ் மக்களுக்குச் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்களை விழிப்படையச் செய்யும் பணியே தமிழ்நெறிப்பணி" என்று இதழின் பொறுப்பாசிரியரும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் தலையங்கத்தில் எழுதியிருப்பது பலித்திட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் அவா.மலேசியத் தமிழர்க்குத் 'தமிழ்நெறி' புதிய இதழல்ல. கிட்டதட்ட 14ஆண்டுகளுக்கு முன்பே 1994 ஏப்பிரல் திங்கள் மலேசியாவில் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் புயலென புரப்பட்ட எழுச்சிமிக்க ஏடுதான் 'தமிழ்நெறி'. மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரின் அறிய சிந்தனையில் கருவாகி கழகத்தின் உயிர்த்தொண்டர்களின் அயராத உழைப்பில் உருவாகி மலேசிய மண்ணில் தமிழ் முரசு கொட்டிய வரலாற்றுச் சிறப்பு இந்தத் 'தமிழ்நெறி' இதழுக்கு உண்டு.ஆனால், வெளிவந்த சில மாதங்களில் பல்வேறு இடர்களின் காரணமாக தமிழ்நெறி நின்று போனது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து 2004 மே திங்களில் 'தமிழ்நெறி' மீண்டும் புத்துயிர் பெற்று புதிய வடிவில் புதிய தோற்றத்தில் வெளிவந்தது. தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுக்கும் ஒரு இதழை வாங்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் உணர்வும் கெட்டுப்போன தமிழர்களிடையே, பெயர்போட முடியாமல் மீண்டும் தடைபட்டது 'தமிழ்நெறி'.ஆயினும், உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்குக் காலந்தோறும் பல்வேறு தடைகளையும், இடர்களையும், இருட்டடிப்புகளையும், மறைப்புகளையும் தாண்டி இன்றளவும் நிலைபெற்று தனித்தன்மையோடு வாழ்ந்து வரும் தமிழ்மொழி போல, 'தமிழ்நெறி' இதழும் பல்வேறு சிக்கல்களை கடந்து இப்போது மறுபடியும் புதுவடிவம் பெற்றுள்ளது. எந்தத் தடைக்கும் அஞ்சாமல், வந்த தடங்கல்கள் அனைத்தையும் வென்று மீண்டும் வெளிவந்துள்ள 'தமிழ்நெறியின்' நெஞ்சுரத்திற்குத் தமிழர்கள் தலைதாழ்த்தி வணக்கம் செய்யவேண்டும்.இவ்விதழ் இந்நாட்டில் பலமிக்க ஓர் இதழாக உருவெடுக்க வேண்டும். அதற்குண்டான அனைத்து வினைப்பாடுகளையும் ஆழ ஆராய்ந்து ஆசிரியர் குழுவினர் செயல்பட வேண்டும். தமிழின்; தமிழர்களின் நலன்பேணும் செய்திகளைத் தாங்கிவருவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி சரியான இலக்கை நோக்கி தமிழரை வழிநடத்த வேண்டும். தமிழ்ப்பற்றாளர்கள் ஊணர்வாளர்கள் அனைவரையும் தமிழ்நெறி எட்டிப்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். நாடு முழுவதும், 'தமிழ்நெறி' அறிமுக விழா, வாசகர் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழ்நெறியைப் பரவச் செய்ய வேண்டும். ஆண்டுக் கட்டண உறுப்பினர்களைப் பெருக்குவதற்கான வழிவகைகளை காணவேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களின் ஆதரவை நாடி ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் தமிழ்நெறி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தக்க திட்டங்களைத் தீட்டி முன்னேற வேண்டும். இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் தமிழ்நெறி ஊடுறுவும் வழிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.இத்தனைக் கருத்துகளும் 'தமிழ்நெறி' ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாதவை அல்ல. இருந்தாலும், தமிழ்நெறி தமிழரின் உயிர்நெறியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இத்தனைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.இவ்விதழின் வெற்றியில் மலேசியத் தமிழரின் பங்கு, குறிப்பாகத் தமிழ்ப்பற்றாளர், உணர்வாளர் என்று முழங்கிக்கொள்வோரின் பங்கு மிக அளப்பரியதாகும். அதோடு, தமிழால் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்விதழை பலமிக்க இதழாக வளர்த்தெடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.காரணம், தமிழை முன்னெடுப்பது ஒன்றே இந்த நாட்டில் தமிழர்களின் நூற்றாண்டு வரலாற்றைக் காப்பதற்கான வழியும்; தமிழர்களின் அடுத்த நூற்றாண்டின் வாழ்வை, வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பும் ஆகும். தமிழ் இல்லையேல் தமிழர்க்கு எதுவே நிலைக்காது என்பதை மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமிழ்நெறியை வாங்கி ஆதரவு செய்ய வேண்டியதும் இன்னும் பலரை வாங்க ஊக்குவிப்பதும் பிறந்த இனத்துக்குச் செய்யும் கடமையாகும்.தமிழ்நெறி இதழ் பற்றிய முக்கிய விவரங்கள்:-1.இதழின் விலை ம.ரி.3.00 மட்டுமே2.தமிழ்நெறி உறுப்பினர் கட்டணம் ம.ரி20.00 (6 மாதங்களுக்கு)3.தமிழ்நெறி முகவரி: Lot, 274, Kampong Bendahara Baru, jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.4.தொலைபேசி: 03-61874103 தொலைப்படி: 03-61874099
தமிழ்நெறி இதழை வாங்குவோம்!
தமிழைக் காப்போம்!
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!
நன்றி: சுப.நற்குணன் - மலேசியா
http://www.thirutamil.blogspot.com/
மலேசியத் தமிழ் இதழியல் துறையில், மறுவரவு மேற்கொண்டு மீண்டும் வந்துள்ளது 'தமிழ்நெறி' என்னும் தமிழ்த் தேசிய மாதிகை (மாத இதழ்). "தமிழைக் காப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்" என்ற முழக்கத்தோடு இந்தச் செப்தெம்பர் திங்களில் தமிழ்நெறி இதழ் வெளிவந்துள்ளது. தமிழ்நெறிச் சிந்தனைகளைத் தாங்கி தமிழ் மீட்புக்காகவும் காப்புக்காகவும் குரல்கொடுக்கும் ஏடாக வெளிவந்துள்ள 'தமிழ்நெறி' இதழை ஒவ்வொரு மலேசியத் தமிழனும் மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
தமிழ் மொழியின நலன் தொடர்பிலான பல அரிய செய்திகளையும் கட்டுரைகளையும் இந்த இதழ் தாங்கிவந்துள்ளது. அறிஞர் அண்ணா, பெரியார், மாவீரன் திலிபன் ஆகியோர் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், மாணவர்களுக்கான தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு வினாவிடை பகுதி, உளவியல் கட்டுரை, ஈழத்துக் கட்டுரை என பல்வேறு அரிய செய்திகளை உள்ளடக்கி மிகவும் தரமான தாள்களில் கவரும்படியாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. "தமிழ்நெறியின் வேலை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே. இது கருத்துப்பரப்பும் அறிவுசான்ற இதழ். எனவே, தமிழ், தமிழர் தொடர்பான அரிய செய்திகளைத் தேவையான கருத்துகளைத் தமிழ் மக்களுக்குச் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்களை விழிப்படையச் செய்யும் பணியே தமிழ்நெறிப்பணி" என்று இதழின் பொறுப்பாசிரியரும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் தலையங்கத்தில் எழுதியிருப்பது பலித்திட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் அவா.மலேசியத் தமிழர்க்குத் 'தமிழ்நெறி' புதிய இதழல்ல. கிட்டதட்ட 14ஆண்டுகளுக்கு முன்பே 1994 ஏப்பிரல் திங்கள் மலேசியாவில் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் புயலென புரப்பட்ட எழுச்சிமிக்க ஏடுதான் 'தமிழ்நெறி'. மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரின் அறிய சிந்தனையில் கருவாகி கழகத்தின் உயிர்த்தொண்டர்களின் அயராத உழைப்பில் உருவாகி மலேசிய மண்ணில் தமிழ் முரசு கொட்டிய வரலாற்றுச் சிறப்பு இந்தத் 'தமிழ்நெறி' இதழுக்கு உண்டு.ஆனால், வெளிவந்த சில மாதங்களில் பல்வேறு இடர்களின் காரணமாக தமிழ்நெறி நின்று போனது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து 2004 மே திங்களில் 'தமிழ்நெறி' மீண்டும் புத்துயிர் பெற்று புதிய வடிவில் புதிய தோற்றத்தில் வெளிவந்தது. தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுக்கும் ஒரு இதழை வாங்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் உணர்வும் கெட்டுப்போன தமிழர்களிடையே, பெயர்போட முடியாமல் மீண்டும் தடைபட்டது 'தமிழ்நெறி'.ஆயினும், உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்குக் காலந்தோறும் பல்வேறு தடைகளையும், இடர்களையும், இருட்டடிப்புகளையும், மறைப்புகளையும் தாண்டி இன்றளவும் நிலைபெற்று தனித்தன்மையோடு வாழ்ந்து வரும் தமிழ்மொழி போல, 'தமிழ்நெறி' இதழும் பல்வேறு சிக்கல்களை கடந்து இப்போது மறுபடியும் புதுவடிவம் பெற்றுள்ளது. எந்தத் தடைக்கும் அஞ்சாமல், வந்த தடங்கல்கள் அனைத்தையும் வென்று மீண்டும் வெளிவந்துள்ள 'தமிழ்நெறியின்' நெஞ்சுரத்திற்குத் தமிழர்கள் தலைதாழ்த்தி வணக்கம் செய்யவேண்டும்.இவ்விதழ் இந்நாட்டில் பலமிக்க ஓர் இதழாக உருவெடுக்க வேண்டும். அதற்குண்டான அனைத்து வினைப்பாடுகளையும் ஆழ ஆராய்ந்து ஆசிரியர் குழுவினர் செயல்பட வேண்டும். தமிழின்; தமிழர்களின் நலன்பேணும் செய்திகளைத் தாங்கிவருவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி சரியான இலக்கை நோக்கி தமிழரை வழிநடத்த வேண்டும். தமிழ்ப்பற்றாளர்கள் ஊணர்வாளர்கள் அனைவரையும் தமிழ்நெறி எட்டிப்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். நாடு முழுவதும், 'தமிழ்நெறி' அறிமுக விழா, வாசகர் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழ்நெறியைப் பரவச் செய்ய வேண்டும். ஆண்டுக் கட்டண உறுப்பினர்களைப் பெருக்குவதற்கான வழிவகைகளை காணவேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களின் ஆதரவை நாடி ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் தமிழ்நெறி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தக்க திட்டங்களைத் தீட்டி முன்னேற வேண்டும். இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் தமிழ்நெறி ஊடுறுவும் வழிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.இத்தனைக் கருத்துகளும் 'தமிழ்நெறி' ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாதவை அல்ல. இருந்தாலும், தமிழ்நெறி தமிழரின் உயிர்நெறியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இத்தனைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.இவ்விதழின் வெற்றியில் மலேசியத் தமிழரின் பங்கு, குறிப்பாகத் தமிழ்ப்பற்றாளர், உணர்வாளர் என்று முழங்கிக்கொள்வோரின் பங்கு மிக அளப்பரியதாகும். அதோடு, தமிழால் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்விதழை பலமிக்க இதழாக வளர்த்தெடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.காரணம், தமிழை முன்னெடுப்பது ஒன்றே இந்த நாட்டில் தமிழர்களின் நூற்றாண்டு வரலாற்றைக் காப்பதற்கான வழியும்; தமிழர்களின் அடுத்த நூற்றாண்டின் வாழ்வை, வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பும் ஆகும். தமிழ் இல்லையேல் தமிழர்க்கு எதுவே நிலைக்காது என்பதை மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமிழ்நெறியை வாங்கி ஆதரவு செய்ய வேண்டியதும் இன்னும் பலரை வாங்க ஊக்குவிப்பதும் பிறந்த இனத்துக்குச் செய்யும் கடமையாகும்.தமிழ்நெறி இதழ் பற்றிய முக்கிய விவரங்கள்:-1.இதழின் விலை ம.ரி.3.00 மட்டுமே2.தமிழ்நெறி உறுப்பினர் கட்டணம் ம.ரி20.00 (6 மாதங்களுக்கு)3.தமிழ்நெறி முகவரி: Lot, 274, Kampong Bendahara Baru, jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.4.தொலைபேசி: 03-61874103 தொலைப்படி: 03-61874099
தமிழ்நெறி இதழை வாங்குவோம்!
தமிழைக் காப்போம்!
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!
நன்றி: சுப.நற்குணன் - மலேசியா
http://www.thirutamil.blogspot.com/
Subscribe to:
Comments (Atom)