மாணவன் - சிற்றிதழ் அறிமுகம்

தமிழரின் தேசிய பொருளாதாரம், வணிகம் - மார்வாடி, தெலுங்கர், மலையாளிகளால் தொடர்ந்து சூறையாடப்படுவதை சு.சா.இரா-வின் 'தமிழரின் வணிகம் தழைக்கட்டும்' கட்டுரை விவரிக்கிறது. நமக்கான தலைவர்கள் இல்லாமல் உலக வங்கிக்காகவும், அமெரிக்க நலன்களுக்காகவும் சேவை புரிகிற தலைவர்களே நமக்கு வாய்த்திருப்பது பெரும் கேடு. தமிழகத்தில் தமிழனுக்கான தலைவர்கள் இல்லாமல் இருப்பதையும், நமக்கான தலைமை, அரசியல் சக்தி தேவை என்பதை இன்றைய அரசியல் களம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
எந்தவொரு தன்னெழுச்சியான மக்கள் போராட்டமும் தத்துவார்த்த போராட்டமாக, சரியான தலைமையோடு இணைக்கப்படும் போது மட்டுமே வெற்றி பெற இயலும். முத்துக்குமார் இறப்பின் போதும், முல்லைப் பெரியாறு சிக்கலின் போதும் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் எழுச்சி, சரியான தத்துவார்த்த வழிகாட்டல் இல்லாமல், தலைமை இல்லாமல் அடங்கி போனது வரலாற்று சாட்சியாய் நம்முன் நிற்கிறது. இனியும் இந்த தவறு நேராவண்ணம் போராட்டத்தின் திசை வழியை தீர்மானிக்கும் சக்தியாக அணிவகுப்போம் என்பதை முடிகொண்டானின் கட்டுரை தெளிவுற எடுத்துரைக்கிறது.
'கால ஆய்வில் கயமை உடைபடும் காலம்' - என்ற த.ரெ.தமிழ்மணியின் கட்டுரை தமிழரின் வரலாற்றை ஆதாரத்துடன், ஆணித்தரமாக நிறுவுகிறார். நூலில் இடம் பெற்றுள்ள சிறுசிறு பெட்டிச் செய்திகளும், கவிதைகளும் ஆவேசத்துடன், கோபக்கனல் தெரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
தமிழன் இழந்த வரலாற்றை புரிந்து கொள்ளவும், மீட்டெடுக்கவும் 'மாணவன்' என்ற இச்சிறு சிற்றிதழ் போராட்ட களத்தில் களமாடுகிறது என்றால் அது மிகையல்ல. தமிழன் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் 'மாணவன்' - சிற்றிதழை படிப்பதுடன், அதனுடைய கருத்தை பரப்பும் பரப்புரையாளனாக மாறுவது காலத்தின் அவசியம்.
மாணவன் - மாணவர்களால்... மக்களுக்கு வழிகாட்டப்படுகிறது...
ஆசிரியர் குழு - ச.தமிழ்வேந்தன், பே.ர.பிரபாகரன்.
தொடர்புக்கு - இரா.க.பிரகாசு
78, அழகிரி நகர், திருவாரூர் - 610 001.
பேசி - 98659 72207
தனி இதழ் - ரூ.5.00 மட்டும்.
ஆண்டு கட்டணம் - ரூ.60.00 மட்டும்.
நன்றி: http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/764-manavanshortmagazine
No comments:
Post a Comment