
மார்க்சிய பெரியாரிய அம்பேத்காரிய சிந்தனைகளைத்தாங்கி, உலகத் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தீவிர அரசியல் விமரிசனங்களோடு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரியல் அறிஞர் தோழர்.வே.ஆனைமுத்து அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருவது "சிந்தனையாளன்" திங்கள் ஏடு ஆகும்.
"இந்தியாவில் பொதுவுடைமை மலர, மார்க்சிய-பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சம உரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாச்சி அமைய ஆவன செய்தல்" என்ற முழக்கத்தோடு,
சம உரிமைக்காவலர்கள் என "மார்க்சு, லெனின், சிங்காரவேலர், பெரியார்" படங்களையும், சமூக நீதி காவலர்களாக "புலே, பெரியார், அம்பேத்கர், லோகியா" ஆகியோரின் படங்களையும் தாங்கி வருகிறது.
இதன் கொள்கை முழக்கங்களாக,
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! - மார்க்சு, எங்கல்சு
ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களே ஒன்று சேருங்கள்! -இலெனின்
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே ஒன்று சேருங்கள்! -பெரியார் ஈ.வெ.இரா
ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
சிந்தனையாளன்,
19, முருகப்பா தெரு (மாடி),
சேப்பாக்கம்,
சென்னை - 600 005.
பேசி: 044-2852 2862.
விலை:
தனி இதழ் : உரூவா.10,
ஆண்டுக் கட்டணம் : உரூவா.120,
வாழ்நாள் கட்டணம் : உரூவா.1000.
தமிழர்கள் அனைவரும் வாங்கிப் பயன் பெற வேண்டும்.
நன்றி.
No comments:
Post a Comment