Friday, May 23, 2008

சிற்றிதழ்கள்

அன்புத் தமிழ் உறவுகளே!

சமூக, கலை, இலக்கிய ஆர்வலர்களாலும் சிந்தனையாளர்களாலும் பெரும் போராட்டங்களுக்கிடையில் நடத்தப்பெற்று வரும் சிற்றிதழ்கள் என்று அறியப்பெறும் தமிழ் இதழ்களை அறிமுகப்படுத்துவதே இத்தளத்தின் நோக்கமாகும். இவ்விதழ்கள் ஏனைய வெகுமக்கள் ஊடகங்களிலிருந்து மாறுபட்டு நல்ல மொழி மொழிநடையும், தீவிர சிந்தனைகளோடும் தத்தமது தளம் சார்ந்து ஆழ்ந்த கருத்துக்களோடும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் நமது பண்பாடும், மொழியும் காக்கப்படுவதோடு, வாசகர்கள் மத்தியில் நல்ல சிந்தனைகளையும் ஏற்படுத்திவருகின்றன.

இத்தகைய இதழ்களை தொடர்ந்து படிப்பதோடு இவற்றின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் நாம் இருக்க வேண்டும் என்ற நோக்கில், இவ்விதழ்கள் பற்றிய சிறு அறிமுகமும், தொடர்பு முகவரிகளையும் இங்கே அறியத்தருகிறோம்.

நன்றி!

No comments: